கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>Tamil Nadu Engineering Admissions 2012 - Rank Enquiry

>>>தொடக்கக்கல்வி பட்டயப்பயிற்சி-ஒற்றைச்சாளர முறை 2012-2013 மாணவர் கலந்தாய்வு தரப்பட்டியல் [D.El.Ed.,Single Window System 2012-2013 Student Counselling Rank List]


தொடக்கக்கல்வி பட்டயப்பயிற்சி-ஒற்றைச்சாளர முறை 2012-2013 மாணவர் கலந்தாய்வு தரப்பட்டியல் வெளியீடு
[D.El.Ed.,Single Window System 2012-2013 Student Counselling Rank List]http://www.animatedgif.net/new/newspin1_e0.gif

>>>Teachers Recruitment Board, Chennai - 600 006 Tentative Provisional List of Candidates Selected for Appointment for Law College Lecturer (Senior Scale) and Pre Law in Govt.Law Colleges 2007 - 08 and 2009 - 10

>>>Teachers Recruitment Board, Chennai - 600 006. Tentative Provisional List of Candidates Selected for Appointment for the Recruitment of Assistant Elementary Educational Officer 2010- 11

>>>பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூலை 13-ல் தொடங்குகிறது

பணிநிரவல் கலந்தாய்வு
  • ஜூலை 13 மற்றும் 14 (வெள்ளி, சனி) - மாவட்டத்திற்குள் பணிநிரவல் (அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும்)
  • ஜூலை 16 மற்றும் 17 (திங்கள், செவ்வாய்) - மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல்
இடமாறுதல் கலந்தாய்வு
  • ஜூலை 23 (திங்கள்) - இடமாறுதல் கவுன்சிலிங் (மாவட்டத்திற்குள்- அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
  • ஜூலை 24 (செவ்வாய்) - இடமாறுதல் கவுன்சிலிங் (மாவட்டம் விட்டு மாவட்டம்-அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்களும்)
  • ஜூலை 27 (வெள்ளி) - ஆசிரியர் பயிற்றுநர்களுக்குப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிமாறுதல்
பதவி உயர்வு கலந்தாய்வு
  • ஜூலை 30 (திங்கள்) - இடைநிலை ஆசிரியர்களுக்குப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள்)

>>>தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) - தொகுதி 4 (Group IV) - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு(HALL TICKET) வெளியீடு

>>>பொறியியல் சேர்க்கைக்கு இன்று தரவரிசை பட்டியல்

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை இன்று காலை வெளியிட்டது.
சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகிறது.
நடப்பாண்டில் பொறியியல் படிப்பில் சேர, ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 71 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான, "ரேண்டம் எண்&' 25ம் தேதி வெளியிடப் பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை 9:30 மணிக்கு, தரவரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிடுகிறது.
பல்கலைக்கழக தேர்வு மையத்தில், உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், தரவரிசை பட்டியலை வெளியிடுவார் என தெரிகிறது. "கட்-ஆப்&' 200ல் துவங்கி, விண்ணப்பித்த 1.8 லட்சம் மாணவ, மாணவியருக்கும், தரவரிசை வெளியிடப்படும். ஜூலை 5, 6 மற்றும் 7ம் தேதிகளில், விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
தொழிற்கல்வி பிரிவு மாணவருக்கு, 7 முதல் 11ம் தேதி வரையும்; மாற்றுத் திறனாளி மாணவருக்கான கலந்தாய்வு, 12ம் தேதியும் நடக்க இருக்கின்றன. பொதுப்பிரிவு கலந்தாய்வு, 13ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் முதல் வாரம் வரை நடக்கிறது.

>>>ஜூன் 30 [June 30]

  • காங்கோ விடுதலை தினம்(1960)
  • ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது(1972)
  • முதலாவது ஹாரி பேட்டர் நூல் வெளியிடப்பட்டது(1997)
  • உலகின் முதல் அவசர தொலைப்பேசி எண்ணான 999 லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது(1937)

>>>ஜூன் 29 [June 29]....

  • செஷெல் விடுதலை தினம்(1976)
  • வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது(1850)
  • பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது(1534)
  • அட்லாண்டஸ் விண்ணோடம், ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல் முறையாக இணைந்தது(1995)

>>>2012-2013ம் கல்வியாண்டில் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பெற்றவர்கள் 29.06.2012 பிற்பகலே விடுவிக்கப்பட்டு அன்றே புதிய பணியிடத்தில் சேர்வதற்கு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

>>>DGE: Application for enrollment to Practical Training Class for SSLC Exam 2012-13

2012-2013-M« fšéah©oš eilbgwΟs Ïilãiy¡fšé bghJ¤nj®éš fyªJbfhŸs el¤j¥bgW« brŒKiw gæ‰Á tF¥òfëš gÂé‰fhd é©z¥g«.

>>>விடுபட்ட பதிவுதாரர்களுக்கு டி.ஆர்.பி., மீண்டும் வாய்ப்பு

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு பட்டியலில் விடுபட்டவர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்காக, ஜூலை 1ம் தேதி, மீண்டும் ஒரு வாய்ப்பை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.
பதிவுமூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர். இதில், விடுபட்ட பதிவுதாரர்களுக்காக, 23, 24ல், சான்றிதழ் சரிபார்ப்பு முகாமை, டி.ஆர்.பி., நடத்தியது. இதிலும், 500 பேர் பங்கேற்கவில்லை.
பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனம் என்பதால், இந்த வாய்ப்பை விட்டுவிட்டால், பிறகு போட்டித் தேர்வு மூலமே, தேர்வு பெற வேண்டிய நிலை, பதிவுதாரர்களுக்கு உருவாகும். 
இதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்கள் மற்றும் பதிவுமூப்பு பட்டியலில் விடுபட்டவர்கள் இருந்தால், அவர்கள், ஜூலை 1ம் தேதி, டி.ஆர்.பி., அலுவலகத்தில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.
நன்றி-தினமலர்

>>>ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம்

பி.எட்., - ஆசிரியர் பயிற்சி டிப்ளமா உள்ளிட்ட படிப்புகளுக்கு, கல்லூரிகளுக்கு தகுந்தாற் போல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு, கட்டணத்தை முறைப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட தனியார் பி.எட்., கல்லூரிகள்; 600 தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரே சீரான வகையில் கட்டணம் இல்லை. கல்லூரிகளுக்கு ஏற்றாற்போல், வெவ்வேறான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
முதன் முறையாக இதை முறைப்படுத்தி, படிப்பிற்கு தகுந்தாற்போல் கட்டணத்தை நிர்ணயித்து, தமிழக அரசு நேற்று அறிவித்தது. சுயநிதி தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான கட்டணம் குறித்து, கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பாலசுப்ரமணியன் நேற்று மாலை அறிவித்தார்.
அவர் கூறியதாவது: சுயநிதி தனியார் கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கல்லூரிகளுக்கு, 2012- 13ம் கல்வியாண்டிற்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, அனைத்து வகை கல்வியியல் கல்லூரிகளிடம் இருந்து, வரவு மற்றும் செலவு விவரங்களை, ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்கப்பட்டது.
இதில், 788 கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் கல்லூரிகளிடம் இருந்து விவரங்கள் பெறப்பட்டன. இந்த ஆவணங்களை, குழு ஆய்வு செய்தது. ஆவணங்களை அனுப்பாத கல்லூரிகள் மற்றும் தணிக்கையாளரின் ஆய்வறிக்கைகள் அனுப்பப்படாத கல்லூரிகளுக்கு, நேரில் சென்று ஆய்வு செய்ய, கல்வி கட்டண நிர்ணயக்குழு, 121 ஆய்வுக் குழுக்களை அமைத்தது.
இக்குழுக்கள், சம்பந்தபட்ட கல்லூரிகளுக்கு, நேரில் சென்று ஆய்வு செய்து, ஆய்வறிக்கைகளை குழுவிடம் சமர்பித்தது. மேலும், பொது மக்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன.
இதன் அடிப்படையில், கட்டண நிர்ணயக்குழு, பல்வேறு கால கட்டங்களில் கூடி, கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆலோசித்து, தற்போது புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. கல்வியியல் கல்லூரிகளுக்கு, சீரான கல்விக் கட்டணம் இதற்கு முன் இல்லை. தற்போது தான், முதல் முறையாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், 2012- 13, 2013- 14, 2014- 15 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கு பொருந்தும்.
குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது குறித்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி பல்கலையிடமோ, அரசிடமோ, குழுவிடமோ பெற்றோர் அல்லது மாணவர் புகார் அளிக்கலாம். சம்பந்தபட்ட கல்லூரி மீது விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.
கட்டணம் நிர்ணயம் தொடர்பான அறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்ற, ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் வீரமணி, "அதிகக் கட்டணம் வசூல், உள்கட்டமைப்பு வசதியின்மை, விதிமுறைகளை கடைபிடிக்காதது, தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், நான்கு கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடைபெறாது" என்றார்.
ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணையதளத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த குட் ஷெப்பர்டு கல்வியியல் கல்லூரி; சேலம் மாவட்டம் பாரதியார் கல்வியியல் கல்லூரி; சென்னை மாவட்டம் மியாசி கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-தினமலர்

>>>ஜூன் 28 [June 28]....

  • ஐரிய உள்நாட்டு போர் ஆரம்பமானது(1922)
  • மால்க்கம் எக்ஸ், ஆப்ரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)
  • கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)
  • இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம்(1921)

>>>School Education (Q) Department G.O.(Rt) No.156, Dated:25-06-2012, Declare Holiday for Educational Institutions Including CBSE Schools in the State of Tamilnadu for Teacher Eligibility Test on 12-07-2012

>>>உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

>>>2012-13ம் கல்வியாண்டில் சமஸ்கிருதம் கற்கும் திறனுள்ள மாணவ/மாணவியர்,இலங்கை மற்றும் ஏனைய அகதிகள், இராணுவப் பணியாளர்கள் மற்றும் முன்னாள் இராணுவப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

>>> DME: MBBS / BDS - Counselling Schedule

>>>DME:Special Category Provisional Eligible List for MBBS / BDS Course 2012-13

>>>அரசிதழ் எண்:25, நாள்:27-06-2012

>>>இரட்டைப்பட்டம்(Double Degree) கல்வித்தகுதிக்கு நாளைய (28.06.2012) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை - அதனைச் செயல்படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

>>>இரட்டைப்பட்டம்(Double Degree) கல்வித்தகுதிக்கு நாளைய (28.06.2012) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை - அதனைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ள தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நன்றி :திரு.ஆ.பாடலீஸ்வரன் அவர்கள்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
கரூர் மாவட்டம்.

>>> தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 3ஆண்டு பட்டப்படிப்பு படித்த பின்பு +2 முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நகல்

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 600 006

..எண்: 9502/டி1/2012,  நாள்: 26.06.2012

பொருள்
:
தொடக்கக் கல்வி - 2012-2013 ஆம் ஆண்டு   - ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - சில நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து.



பார்வை
:
1. அரசாணை (1டி) எண் 158 , பள்ளிக்கல்வித் (1) துறை, நாள் 18.05.2012
2.தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ..எண் 12118/டி1/2011, நாள்:     .12.2011
... ... ...

 பார்வை 1ல் காணும் அரசாணையின்படி நடைபெறவுள்ள ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் கீழ்காணும் கூடுதல் நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்குமாறு அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1.       அரசாணை (நிலை) எண் 107 , பள்ளிக்கல்வித்துறை, நாள் 18.08.2009ன் படி 10+2+3 என்ற முறையில் பட்டம் பெற்றவர்களுக்கும் மற்றும்  11+1+3 என்ற முறையில் பட்டம் பெற்றவர்களுக்கும் மட்டும் உரிய பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியலில்சேர்த்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்த பின்பு +2          முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கக்கூடாது.

2.       2012-2013 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகளாகத்தரம் உயர்த்தப்பட்ட 710 நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து பணிநிரவல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்கள், நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பொதுமாறுதலில் முன்னுரிமை கோரினால் வழங்கப்பட வேண்டும்.

  (ஒப்பம்) 
தொடக்கக் கல்வி இயக்குநர்

பெறுநர்
அனைத்துமாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள்

>>>பள்ளி சான்றிதழில் பிறந்த தேதி குளறுபடிகளை, தலைமை ஆசிரியர்கள் சரி செய்யலாம்

பள்ளி சான்றிதழில் பிறந்த தேதி குளறுபடிகளை, தலைமை ஆசிரியர்கள் சரி செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமங்களில் 5 வயதுக்கு முன்பே குழந்தைகளை பள்ளியில் சேர்த்து, பிறந்த தேதியை மாற்றிப் பதிவு செய்கின்றனர். இதனால் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பள்ளி சான்றுகளில் வேறுபாடு ஏற்படுகிறது. இக்குளறுபடிகளால் மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதும்போது சிக்கல் ஏற்படுகிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன்படி நடவடிக்கை எடுத்துள்ள கல்வித்துறை, உள்ளாட்சிகளில் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்படி, பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் செய்யலாம் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
நன்றி-தினமலர்

>>>ஜூன் 27 [June 27]....

  • உலகின் முதலாவது ஏ.டி.எம்., லண்டனில் அமைக்கப்பட்டது(1967)
  • உலகின் முதல் அணுகரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது(1954)
  • கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)
  • சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)

>>>தமிழ்நாடு தொடக்கக் கல்வி - 2012-2013ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு - மேற்பார்வை செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த இணை இயக்குநர்கள் - பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்து உத்தரவு

>>>9 கள்ளர் பள்ளிகளை தரம் உயர்த்தி மாண்புமிகு. தமிழக முதல்வர் உத்தரவு

>>>ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 (TNTET 2012) - அனைத்து மாணவர்களின் தேர்வு மைய விவரம்- Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Venue wise Individual Query for the Candidate

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006
Tamil Nadu Teacher Eligiblity Test 2012
I. List of Admitted candidates                                      -        656088
  • Date of Examination: 12.07.2012 Thursday
  • Paper I Timing: 10:30 A.M to 12 Noon
  • Paper II Timing: 02:30 P.M to 04:00 P.M
  • Paper Both : (Paper I Timing and Paper II Timing)

>>>Higher Secondary Examination March 2012 - Application for Revaluation / Retotalling of Answer Script

>>>ஜூன் 26 [June 26]....

  • ருமேனியா கொடி நாள்
  • மடகஸ்கார் விடுதலை தினம்
  • அஜர்பைஜன் ராணுவ மற்றும் கடற்படை தினம்
  • உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது(1976)

>>>2012-2013 தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள்

>>>TNPSC Tentative Answer Keys

>>>DME: Provisional Merit List. for MBBS / BDS Course 2012- 2013

>>>ஜூன் 25 [June 25]....

  • வின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)
  • குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன(1991)
  • உலகின் முதலாவது செயற்கைக்கோள் ஒளிபரப்பு 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது(1967)
  • பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன் இறந்த தினம்(2009)

>>>01.01.2012 நிலவரப்படி 2012-13ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான திருத்திய முன்னுரிமைப் பட்டியல்.

தமி
ழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,சென்னை-6
ந.க.எண்.111300/சி1/இ1/2011 நாள்.22.06.2012.
01.01.2012 நிலவரப்படி 2012-13ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான திருத்திய முன்னுரிமைப் பட்டியல்.
முன்னுரிமை சார்ந்து பெறப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இத்திருத்திய பட்டியல் வெளியிடப்படுகிறது. (25-04-2012ல் வெளியிடப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியல் இரத்து செய்யப்படுகிறது.)
>>>01.01.2012 நிலவரப்படி 2012-13ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான திருத்திய முன்னுரிமைப் பட்டியல்.- தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்SET EXAM
>>>01.01.2012 நிலவரப்படி 2012-13ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்- தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்SET EXAM

>>>தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:42212/பிடி1/2012, நாள்:21-06-2012ன் படி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளை அனைத்துப்பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்திட கோருதல்

>>>பி.எப்., கணக்கு விவரம் தெரியவில்லை : ஆசிரியர்கள் மனுவுக்கு பதிலளிக்க நோட்டீஸ்

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வருங்கால வைப்புநிதி (பி.எப்.,) கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 
ஆசிரியர் தாஸ், தாக்கல் செய்த மனு: ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 1981ம் ஆண்டு, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதில் பணியாற்றிய ஆசிரியர்களும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். தொடக்கக் கல்விக்கென தனி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வந்தாலும், அவர்களின் பி.எப்., கணக்கை, உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், நிர்வகித்து வந்தனர். பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம், தணிக்கை செய்வதில்லை. இதனால், தங்களின் பி.எப்., கணக்கில் எவ்வளவு பணம் செலுத்தப்படுகிறது என்கிற தெளிவான விவரங்கள், ஆசிரியர்களிடம் இல்லை. இந்தக் கணக்கை, அவர்களால் சரிபார்க்க முடியவில்லை. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை கண்காணிக்க, முறையான நிர்வாக நடைமுறை இல்லை. இந்தக் குழப்பங்களால், பி.எப்., நிதியில் சிலர் முறைகேடு செய்கின்றனர். தற்போது, பி.எப்., கணக்கை அரசு தகவல் தொகுப்பு விவர மையம் நிர்வகிக்கிறது. இங்கு பணியாற்றும் சிலர், தற்காலிக ஊழியர்களாக உள்ளனர். பி.எப்., நிதி, தணிக்கைக்கு உட்பட்டது. 85 ஆயிரம் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கில் வரும் பணத்தை நிர்வகிக்க, தணிக்கை செய்ய, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம் போல், எந்த தனிப்பட்ட அலுவலகமும் இல்லை. இதனால், சில நகரங்களில் பி.எப்., நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக, 210 கோடி ரூபாய், பி.எப்., மூலம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவை பரிசீலிக்குமாறு, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார்.
 நன்றி-தினமலர்

>>>செல்லிடப்பேசி(MOBILE) - பாதுகாப்பான பயன்பாட்டுக்கு வழிமுறைகள்

அன்றாட வாழ்வில் மொபைல் போன் பயன்பாடு இன்றியமையாததாக மாறிவிட்டது. மொபைல் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கக் கூட யாரும் தயாராக இல்லை. அதன் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் தேவை. இல்லையென்றால் பல வித பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும் முறைகளையும் காண்போம்.

கண்களை காத்துக் கொள்ளுங்கள்:* மொபைல் போன் திரை, கண்களை பாதிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (சி.வி.எஸ்.,) எனும் நோய் தாக்குகிறது.
* அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் மொபைல் திரையை பார்க்கிறார்.

சி.வி.எஸ்.,சின் அறிகுறிகள்:கண்கள் வறண்டு போதல்: சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 16-20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் மொபைல் போன்களை பார்க்கும் போது 6-8 முறைதான் சிமிட்டுகிறோம்.

தலைவலி: கழுத்தை சாய்த்து வைத்துக் கொண்டு, கண்களை வருத்தி மொபைல் திரைகளை பார்ப்பதால் தலைவலி ஏற்படும்.
பார்வை மங்குதல்: தொடர்ந்து திரைகளை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பார்வை மங்கலாகும். பின் அதுவே நிரந்தரமாகும்.

கிட்டப் பார்வை: மொபைல் போன் திரையினால், கிட்டப் பார்வை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* குறைபாடை சரி செய்ய கண்ணாடி அணிதல், கான்டாக்ட் லென்ஸ் பொருத்துதல், லேசர் அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
* 2 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர்.
* ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் அமெரிக்கர்கள், லேசர் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

கண்களை காக்க...:* அடிக்கடி கண் சிமிட்டுங்கள்
* பாதுகாப்புக்காக சன் கிளாஸ் அணியுங்கள்
* விழிகளை சுத்தம் செய்யும் மருந்துகளை பயன்படுத்துங்கள்

காதுகளுக்கு ஏற்படும் பாதிப்பு:தொடர்ந்து மொபைலில் பேசும் 37 சதவீதம் பேருக்கு காதிரைச்சல் நோய் ஏற்படுகிறது. மொபைலில் பேசாத நேரங்களிலும் காதில் முணுமுணப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
* மொபைலில் பத்து நிமிடத்திற்கு மேலாக தொடர்ந்து பேசுவோருக்கு காதிரைச்சல் ஏற்பட 71 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.
* காதிரைச்சல் நோயை சரி செய்யவது கடினம்.

காதிரைச்சலை தவிர்க்க...:* அதிகப்படியான ஒலியைக் கேட்கக் கூடாது. உப்பு, காபியின் அளவை குறைக்க வேண்டும். புகைக்கக் கூடாது. வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வை தவிர்க்க வேண்டும்.
* எளிய உடற்பயிற்சி செய்யவும். ரத்த அழுத்தத்தை சீராகவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும்.

கவனமாக இருங்கள்:* 40, 50 வயதில் வரும் பிரச்னைகள், தற்போது 15 வயதிலே ஏற்படுகிறது. இதற்கு கம்யூட்டர், மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதும் முக்கிய காரணம்.
* மொபைலில் "டைப்' செய்யும் போது 91 சதவீதம் பேர் அளவுக்கு அதிகமாக கழுத்தை சாய்க்கின்றனர். இதனால் கழுத்துவலி ஏற்படுகிறது.
* 10-20 சதவீதம் பேர், மொபைல், கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
* இடைவெளி எடுங்கள்
* "வார்ம் அப்' செய்யவும்
* தினமும் உடற்பயிற்சி செய்யவும்
* அதிகம் நீர் அருந்தவும்

தூக்கத்தை கெடுக்கும் மொபைல்:* மொபைல் போனை உபயோகிப்போருக்கு தூக்கம் வர 6 நிமிடம் தாமதமாகிறது. ஆழ்ந்த தூக்கத்தையும் பல நிமிடங்கள் மொபைல் போன் தடுக்கிறது.
* பத்து ஆண்டுகளுக்கும் மேல் மொபைல் உபயோகிப்போருக்கு, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளைக் கட்டிகள் ஏற்பட 50 சதவீத வாய்ப்பு உண்டு.
* ஒரு வகை நரம்பு புற்றுநோய், மூளைப்புற்று நோய் ஆகியவை மொபைல் போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் என கண்டறிப்பட்டுள்ளது.
* அதிகப்படியான வேலைப்பளுவை குறைக்கவும்.
* படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* முடிந்தவரை "ஹெட் போனை' பயன்படுத்தவும்.
* தூங்கும் போது மொபைலை தலை யிலிருந்து குறைந்தது 98 இன்ச் தள்ளி வைக்கவும்.
கவனத்தை சிதற வைக்கும் மொபைல்
* போதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் பாதிப்பை விட, மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டும் போது, நான்கு மடங்கு அதிகமாக விபத்து ஏற்படும்.
* மொபைலில் "டைப்' செய்து கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு 23 மடங்குக்கும் அதிகமாக விபத்து ஏற்படும்.

விபத்தை தவிர்க்க...:* வாகனத்தை ஓட்டும் போது அவசியமாக பேசியாக வேண்டிய கட்டாயத்தில் "ஹேண்ட்ஸ் பிரீயை' பயன்படுத்தலாம்.
* டிரைவிங்கின் போது மொபைலை "வைப்ரேஷனில்' வைக்கவும்.
மொபைல் போன் தகவல் தொடர்பை எளிதாக மாற்றியுள்ளது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால், இழப்புகளை தவிர்த்து பயன் பெறலாம்.
நன்றி-தினமலர்

>>>ஜூன் 24 [June 24]....

  • மணிலா நகரம் அமைக்கப்பட்டது(1571)
  • நியூஜெர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது(1664)
  • தமிழறிஞர் கா.அப்பாத்துரை பிறந்த தினம்(1907)
  • கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்(1921)
  • மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் இறந்த தினம்(2006)

>>>கேள்வி குறியாகும் சமச்சீர் கல்வி நோக்கம் !

சமச்சீர் கல்வி திட்டத்தில் புத்தகங்கள் குறைக்கப்பட்டாலும் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத் திட்டத்தில் மறைமுகமாக 20 புத்தகங்கள் வரை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், புத்தக சுமையை குறைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வியின் நோக்கம் கேள்வி குறியாகியுள்ளது.
மாணவர்களின் உடல் மற்றும் மன அழுத்தம் குறையவும், தேர்வு பயத்திலிருந்து விடுபடவும், அவர்கள் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்ந்து முழுமையான ஆளுமை வளர்ச்சி பெறவும் இத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்களின் எடையில் புத்தக சுமை என்பது 10 முதல் 15 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, பள்ளி நாட்களை ஜூன் முதல் ஆகஸ்ட் வரை முதல் பருவமாகவும், செப்., முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவமாகவும், ஜனவரி முதல் மார்ச் வரை மூன்றாம் பருவமாகவும் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பருவத்துக்கு உரிய பாடப் புத்தகங்களை மாணவர் படித்தாலே போதும். ஒரு பருவத்துக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே புத்தகமாகவும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஒரு புத்தகமாகவும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஒரு புத்தகமாகவும், மொத்தம் 2 புத்தகங்கள் என சுருக்கப்பட்டன.

அரசு பள்ளிகளில் இது நடை முறைப்படுத்தப்பட்டாலும் தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இம்முறை பெயரளவுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டு வருகிறது.

குறைத்தும் குறையாத சுமைகள்: மதுரையில் உள்ள ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் 4ம் வகுப்பில் முதல் பருவத்துக்கான புத்தகம் தவிர மாணவர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ள புத்தகங்களின் பெயர் விபரம்:

இங்கிலீஸ் கிராமர் அன்ட் காம்போஷிசன், கர்சிவ் ரைட்டிங், ஸ்போக்கன் இங்கிலீஸ், டிக்ஸ்டினரி அன்ட் அட்லஸ், தி கோல், தமிழ் எழுத்து பற்றிய நூல், பைந்தமிழ் பயிற்சி நூல், ஃபன் மென்டல் மேத்தமெட்டிக்ஸ், அபாகஸ் டேபில் புக்ஸ், மேப் டிராயிங், டெல் மி மோர், சிக்ஷா சுரபி, இந்தி ரைட்டிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், டிராயிங் புக்ஸ், இதிகாசங்கள் என... 20 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒருசில தனியார் பள்ளிகளின் இந்த தன்னிச்சை முடிவால் "சுமைதாங்கி' மாணவர்கள் இந்தாண்டும் வழங்கம் போல் "புத்தக மூட்டைகளை' சுமக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர் செந்தூரன் கூறியதாவது:

அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி என்ற நோக்கத்தில் தான் சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், சில பள்ளிகளில் கூடுதலாக கற்றுத்தருகிறேன் என்று பெற்றோர்களை ஏமாற்றும் விதமாக இதுபோன்ற ஏராளமான புத்தகங்கள் வாங்க சொல்கின்றனர். இது மாணவர்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும். சமச்சீர் கல்வி முறை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுகிறதா என்பது குறித்து ஓய்வு பெற்ற கல்வியாளர் குழு அமைத்து கண்காணிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.
-தினமலர்

>>>தமிழக அரசின் மாணவர் நலனுக்கான திட்டங்கள் மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை - அறிவிப்புகள் [Tamilnadu Government Student Welfare Schemes & Special Scholarships]

>>>33 DIET Lecturers Promoted as Senior Lecturers - List

>>>தொடக்கக்கல்வி பட்டயப் படிப்பு - கற்பித்தல் பயிற்சி படிவங்கள்

>>>முப்பருவப் பாடத்திட்டம் [Trimester Syllabus]

>>>புதிய குடும்ப அட்டை இப்போது இல்லை : இரண்டாண்டுக்கு கூடுதல்தாள் ஒட்ட நடவடிக்கை

தற்போதுள்ள குடும்ப அட்டையை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பயன்படுத்தும் வகையில், கூடுதல் தாள் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டைகள் கடந்த 2005 ம் ஆண்டு தயாரானவை. அவை, 2009 ம் ஆண்டு வரை பயன்படுத்தும் விதத்தில் அச்சிடப்பட்டிருந்தன. அதில், கூடுதலாக இருந்த பக்கம் 2010 ம் ஆண்டுக்கு பயன்படுத்தப் பட்டது. குடும்ப அட்டைகளை மாதந்தோறும் அத்தியாவசியமாக பயன்படுத்துவதால் சேதமடைந்துள்ளன. உரிய காலம் முடிந்து மேலும் ஓராண்டு பயன்படுத்திய பின்னும், பொது வினியோகத்துறை புதிய அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, 2012 ம் ஆண்டுவரை பயன்படுத்தும் வகையில் பழைய அட்டையில் கூடுதல் தாள் இணைக்கப்பட்டது. இந்த அட்டைகள்தான் இப்போது பயன்பாட்டில் உள்ளன.
தமிழகத்தில், 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றை ஏழு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். நீண்ட காலம் பயன்படுத்துவதால் பல அட்டைகள் அழுக்கடைந்து, சிதைந்து தெளிவில்லாமல் உள்ளன. பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், விலையில்லா பொருள் வாங்கும் போது பதிக்கும் முத்திரை போன்றவற்றால், குடும்ப அட்டைகள் தெளிவற்ற நிலையில் உள்ளன. சென்னையில் வாடகை வீடுகளில் வசிப்போர் அடிக்கடி வீட்டை மாற்றுவதால், அட்டையில் திருத்தம் அதிகரித்து தெளிவற்ற நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில், புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி மேலும் தள்ளிப்போகிறது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு இணைப்புத்தாளை பயன் படுத்த பொது வினியோகத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு பயன்படுத்துவதற்கான ஆவணங்களை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி துவங்கியுள்ளது.
குடும்ப அட்டை ஒவ்வொரு குடும்பத்திலும் முக்கிய ஆவணமாக உள்ளது. முகவரியை உறுதிபடுத்துவது உட்பட முக்கிய ஆவணங்களுக்கு இதுவே சான்றாக உள்ளது. இந்த நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் அச்சிடப்பட்ட குடும்ப அட்டையில் மங்கலான போட்டோ, தெளிவில்லாத முகவரி, சேதமடைந்த அட்டை போன்ற காரணங்களால், சான்றாதரமாக சமர்ப்பிக்கும் போது பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது.
மத்திய அரசு வழங்கிவரும் ஆதார் அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு, குடும்ப அட்டையை ஸ்மார்ட் கார்ட் வடிவில் வழங்கப்படும் என்று பொது வினியோகத்துறை அறிவித்திருந்தது. அதற்கான பணிகள் மாவட்ட வாரியாக நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களிலும் பணி துவங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், ஆதார் அடையாள அட்டை பணியே முழுமையாக நடக்கவில்லை. இந்த நிலையில் ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை தயாரிக்கும் பணி எப்போது துவங்கும் என்று தெரியவில்லை.
ஸ்மார்ட் கார்டு தயார் செய்ய, பத்து விரல் ரேகை பதிவு, கண்கருவிழி, போட்டோ பெயர், முகவரி போன்றவற்றை கணினியில் பதிவு செய்ய வேண்டும். இந்த பணிகளை முடிக்க நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்த பணி துவங்கும் வரை குடும்ப அட்டையில் கூடுதல் இணைப்பு பயன்படுத்துவதற்கு பதில், நகல் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று பொது நலச் சங்கங்கள் கோரியுள்ளன.
இது குறித்து பொது வினியோகத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ""தற்போது உள்ள குடும்ப அட்டையை, பல ஆண்டுகள் பயன்படுத்துவதால், தெளிவற்ற நிலையில் உள்ளது உண்மைதான். இந்த அட்டையை மாற்றி கேட்டு தினம் ஏராளமானோர் புகார் கொடுக்கின்றனர். அட்டை தொலைந்தால்தான் நகல் அட்டை கொடுக்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு வடிவில் குடும்ப அட்டை வழங்கும் வரை நகல் அட்டை வழங்குவது பற்றி அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.
தத்கால் அட்டை பெறுவது எப்படி : ரேசன் பொருள் வழங்காமல், இருப்பிட ஆதாரத்துகாக குடும்ப அட்டை தத்கால் முறையில், பொது வினியோகத்துறை, 20 நாளில் வழங்குகிறது. சென்னையில், உணவு பொருள் வழங்கல் மண்டல அலுவலகங்களிலும், மற்ற மாவட்டங்களில் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும், இதற்கான விண்ணப்பம் கிடைக்கும். உரிய சான்று இணைத்து விண்ணப்பம் செய்து, மஞ்சள் கலரில் ஆன, பொருள் இல்லா குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை : தமிழகம் அல்லது வேறு மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டையில், பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்
இரண்டு ஆண்டிற்கு மேல் குடியிருந்தற்க்கான, வங்கி புத்தகம், வாக்காளர் அட்டை, எரிவாயு இணைப்பு ரசீது, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட் போன்ற ஆவணத்தை ஆதார ஆவணமாக இணைக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் ரூபாய் 100 கட்டணமாக செலுத்த வேண்டும். உரிய அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், குடியிருப்பு முகவரியில் வந்து விசாரணை நடத்தி, 20 நாளில் பொருள் இல்லா குடும்ப அட்டை வழங்குவர். இந்த அட்டையை பயன்படுத்த குறிப்பிட்ட கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த அட்டை முகவரி சான்றுக்கு மட்டுமே பயன்படும். வேறு குடும்ப அட்டையில் பெயர் இருப்பதை மறைத்து விண்ணப்பித்தால், பொருள் இல்லா குடும்ப அட்டை ரத்து செய்யப்படும்.
நன்றி-தினமலர்

>>>டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்காக 500 "ஆன்-லைன்' உதவி மையங்கள்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வசதியாக, மாநிலம் முழுவதும், உதவி மையங்கள் அமைக்கப் பட்டு உள்ளன. சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, இந்தியன் வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள, "ஆன்-லைன்' உதவி மையத்தை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ், நேற்று காலை திறந்து வைத்தார்.

அனைத்து இடங்களிலும்... : பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மூன்று கணினிகளுடன் கூடிய வசதிகள், இந்த மையத்தில் ஏற்படுத்தப் பட்டு உள்ளன. இதேபோல், மாநிலம் முழுவதும், 500 "ஆன்-லைன்' உதவி மையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன; பல இடங்களில் அமைக்கப் பட்டு விட்டன. சென்னையில், அம்பத்தூர், ஆவடி கேம்ப், பார்க் டவுன் உள்ளிட்ட, ஒன்பது தபால் நிலையங்களிலும்; அண்ணாநகர், புரசைவாக்கம், துறைமுகம், ஆயிரம் விளக்கு, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய ஆறு இடங்களில் உள்ள இந்தியன் வங்கி கிளைகளிலும், "ஆன்-லைன்' உதவி மையங்கள் அமைக்கப் பட்டு விட்டன. மேலும், 25க்கும் மேற்பட்ட இடங்களில், மையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது.

40 ஆயிரம் பேர் பதிவு : தற்போது, குரூப்-4 தேர்வை அறிவித்துள்ளோம். இத்தேர்வுகள் உட்பட, இனி நடைபெறும் அனைத்து தேர்வுகளுக்கும், "ஆன்-லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுகளுக்கு இதுவரை, 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்வாணைய இணையதளத்தில், தேர்வர்கள் தங்கள் பெயரை நிரந்தர பதிவாக செய்துகொள்ளலாம் என, ஏற்கனவே அறிவித்தோம். இதுவரை, 40 ஆயிரம் பேர் இதில் பதிவு செய்துள்ளனர். இப்பதிவு, ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். ஒருமுறை பதிவு செய்துவிட்டால், ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியாக பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால், நிரந்தர பதிவு எண்ணை குறிப்பிட்டு, எழுதப்போகும் தேர்வுக்குரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்; விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

சென்னையில் 24 மையம் : நிரந்தர பதிவு செய்யாதவர்கள், இணையதளம் மூலம் பெறப்படும் செலுத்துச் சீட்டை பயன்படுத்தி, 820 தபால் நிலையங்களிலும்; 805 இந்தியன் வங்கி கிளைகளிலும், விண்ணப்பக் கட்டணமாக 50 ரூபாயும்; தேர்வுக் கட்டணமாக 75 ரூபாயும் செலுத்த வேண்டும். இதுவரை, 104 மையங்களில் நடந்த தேர்வாணையத்தின் தேர்வுகள், இனி, 245 மையங்களில் நடைபெறும். சென்னையில், 24 மையங்களில் தேர்வுகள் நடக்கும். இவ்வாறு நடராஜ் கூறினார்.

>>>குரூப்-4 பணிக்கு தனி நிரந்தர பதிவு வேண்டாம்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

குரூப்-4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தனியாக நிரந்தரப் பதிவை செய்ய தேவையில்லை என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரந்தரப் பதிவும், அவ்வப்போது, வெளியிடும் அறிக்கைகளுக்கான இணையவழிப் பதிவையும் அறிமுகப்படுத்தி உள்ளது. விண்ணப்பதாரரின் நலனைக் கருத்தில் கொண்டு, குரூப்-4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களின் விவரங்களையும், நிரந்தரப் பதிவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, குரூப்-4 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தனியாக நிரந்தரப் பதிவைச் செய்யத் தேவையில்லை. நேரடியாக, குரூப்-4க்கான இணையவழி விண்ணப்பத்தை பதிவு செய்தால், கிடைக்கும் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லே, நிரந்தரப் பதிவாக ஏற்றுக் கொள்ளப்படும். இது, அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு செல்லத்தக்கது. ஏற்கனவே, நிரந்தரப் பதிவு முறையில் மட்டும் பதிவு செய்தவர்கள், குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, தனியே விண்ணப்பிக்க வேண்டும். நிரந்தரப் பதிவு முறையில், விண்ணப்பதாரர்களின் அடிப்படை விவரங்கள் மற்றும் புகைப்படம் கையொப்பம் ஆகியவை மட்டுமே பெறப்படுகின்றன. ஆனால், குறிப்பிட்ட தேர்வுக்கு (குரூப்-4 அல்லது குரூப்- 2 என, உரிய பதவிகளுக்கு) உரிய கல்வித் தகுதி, தொழில் நுட்பக் கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி முன் அனுபவம், தேர்வு மையம் ஆகியவை, ஒவ்வொரு தேர்வுக்கும் மாறுபடும். மேலும், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே, தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவெண்ணைக் கொண்டு விண்ணப்பதாரர்கள், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

>>>40 நாட்களில் குரூப்-4 தேர்வு முடிவு: நடராஜ் தகவல்

"வரும் ஜூலை 7ல் நடக்கும் குரூப்-4 தேர்வு முடிவுகள், 40 நாட்களுக்குள் வெளியிடப்படும். தேர்வானவர்களுக்கு, கவுன்சிலிங் வாயிலாக பணி நியமன ஆணைகள், 15 நாட்களில் வழங்கப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,), குரூப்-4 தேர்வுகள், ஜூலை 7ம் தேதி நடக்கின்றன. மண்டல அளவிலான தேர்வு ஏற்பாடுகள் குறித்து, ஆணைய தலைவர் நடராஜ், கோவையில் நேற்று, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

40 நாளில் முடிவு: பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும், மொத்தம் 244 இடங்களில், 5,000 மையங்களில், குரூப்-4 தேர்வுகள் நடக்கின்றன. 10 ஆயிரத்து 793 பணியிடங்களுக்கு, 12.50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் இருந்து, அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மாநிலத்தில், அதிகளவில் சேலம் மாவட்டத்தில், 1,013 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக, மையங்களின் கீழ் தளங்களில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்வு மையங்களில், வினாத்தாள் வினியோகம் முதற்கொண்டு, அனைத்து நடவடிக்கைகளும், வீடியோவில் பதிவு செய்யப்படும். தேர்வு எழுதிய 40 நாட்களுக்குள், முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, கவுன்சிலிங் மூலம், 15 நாட்களுக்குள் பணி நியமனம் அளிக்கப்படும். கவுன்சிலிங் நடவடிக்கைகள் தொடர்பாக, அண்ணா பல்கலையின் உதவி கோரப்பட்டுள்ளது. அடுத்த தேர்வு நடந்து, முடிவு அறிவிக்கும் வரை, காத்திருப்போர் பட்டியல் பராமரிக்கப்படும்.

குரூப்-2 தேர்வு: குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 3,663 பணியிடங்களுக்கு, ஒரு நாளைக்கு, 5,000 விண்ணப்பங்கள், இணையம் வாயிலாக வருகின்றன. மொத்தம், ஐந்து லட்சம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு அடுத்தபடியாக, 1,300 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதில், 15 லட்சம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள், முக்கிய தேர்வுகள் நடக்க உள்ளன. இவ்வாறு நடராஜ் கூறினார்.

"ஆண்டிற்கு ஒரு தேர்வு இல்லை': டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் மேலும் கூறியதாவது: குறிப்பிட்ட பணியிடங்களுக்கு, ஓராண்டிற்கு, ஒரு தேர்வு என்ற நடைமுறை கிடையாது. தேவைப்பட்டால், கூடுதல் தேர்வுகள் நடத்தப்படும். காலிப் பணியிடங்கள் குறித்த பட்டியல் தரப்பட்டால், அதற்கு ஏற்றவாறு, தேர்வுகள் குறித்து அறிவிக்கப்படும். குரூப்-4 தேர்வுக்கு, முதலில், 3,000 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. நாங்கள் முயற்சி எடுத்து, அனைத்து அரசு துறைகளிடமும் பட்டியல் பெற்று, தற்போது, 10 ஆயிரத்து 793 பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்துகிறோம். குரூப்-2 தேர்விலும், முதலில் 1,615 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, தற்போது, 3,663 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நான் பொறுப்பேற்ற பின், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, 6,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு நடராஜ் கூறினார்.

>>>தொடக்கக்கல்வி பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்....

ஆசிரியர் பயிற்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள் என்ற நிலையில், கவுன்சிலிங்கில் உள்ள, 17 ஆயிரத்து, 98 இடங்களுக்கு, நேற்றுடன் வெறும், 2,509 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர்.
நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் கவுன்சிலிங் ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, 14 ஆயிரத்து 128 இடங்களும் போணியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த 13ம் தேதி முதல், 110 மையங்களில் முதலாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பிளஸ் 2 தேர்வில், 540 மதிப்பெண் பெற்றவர்கள், இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
சீண்ட ஆளில்லை:
இந்த பயிற்சியைப் பெற, மாணவ, மாணவியர் ஒரு காலத்தில் முட்டி, மோதிய நிலையில், இன்று, சீண்ட ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, 2,970 இடங்களுக்கு, நேற்று வரை வெறும் 2,509 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அரசுப் பள்ளிகளில் உள்ள இடங்கள் அளவிற்குக் கூட விண்ணப்பம் வராதது, துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மேலும் சரிய வாய்ப்பு:விண்ணப்பித்தவரில், எத்தனை பேர் உறுதியாக வருவர் என்பதும் தெரியாது; பல பேர், கலந்தாய்விற்கே வர மாட்டார்கள் என்பதால், இந்த எண்ணிக்கை, மேலும் சரிய வாய்ப்புள்ளது.அரசுப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கே இந்த நிலை என்பதால், அரசு உதவி பெறும் ஆசிரியர்பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, 1,758 இடங்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 12 ஆயிரத்து, 370 என, மொத்தம் 14 ஆயிரத்து, 128 இடங்கள் போணியாகாத நிலை உருவாகியுள்ளது.
வேலைவாய்ப்பு இல்லை:ஆசிரியர் பயிற்சியைப் பெற்றால், அரசு ஆரம்பப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேரலாம். தற்போதைய நிலவரப்படி, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி மற்றும் மாநில அளவிலான பதிவு மூப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.பதிவு மூப்பு என வரும்போது, ஏற்கனவே ஒரு லட்சம் பேர் வரை காத்திருப்பது தான், ஆர்வமின்மைக்கு காரணமாக உள்ளது. முதலில், மாவட்ட அளவிலான பதிவு மூப்பு என்ற நிலை இருந்தபோது, உடனுக்குடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை இருந்தது. தற்போது, அது போன்ற நிலை இல்லை. இதுவும், மாணவர்கள்புறக்கணிப்பிற்கு காரணம்.
புதிய திட்டம் வருமா?கடந்த ஆண்டு, 85 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும், இந்த ஆண்டு, 50 பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலை தொடர்ந்தால், அடுத்த ஒரு சில ஆண்டுகளில், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளே இல்லாத நிலை ஏற்படும்.ஆசிரியர் பயிற்சியைப் பெறுபவர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை அரசு உருவாக்கினால் மட்டுமே, இந்த பயிற்சிக்கு மீண்டும் புத்துயிர் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி-தினமலர்

>>>ஜூன் 23 [June 23]....

  • உகாண்டா, போலந்து தந்தையர் தினம்
  • ஐக்கிய ராஜ்யத்தின் (United Kingdom) சமூக சேவை தினம்
  • பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது(1894)
  • கிரிஸ்டோபர் ஷோல்ஸ், தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1868)

>>>As per Elementary Director's Proceedings R.C.No:014115/D1/2012,Dated:15-06-2012, G.O.Ms.No:133,Dated:04-06-2012 Communicated to All District Elementary Educational Officer's for Information and Necessary Action....

>>>அரசாணை (நிலை) எண்:146,நாள்:19-06-2012, 01-06-1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும்,தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் பணியாற்றியவர்களின் மொத்தப்பணிக்காலத்தையும் கணக்கிட்டு 01-06-1988 அன்று நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியில் தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதித்தல் - இவ்வரசாணை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:13907/எல்1/2011,நாள்:20-06-2012ன் படி அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் தக்க நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது...

>>>அரசாணை (நிலை) எண்:146,நாள்:19-06-2012, 01-06-1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும்,தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களாகவும் பணியாற்றியவர்களின் மொத்தப்பணிக்காலத்தையும் கணக்கிட்டு 01-06-1988 அன்று நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியில் தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதித்தல் - அரசாணை மற்றும் இயக்குநரின் செயல்முறைகளைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நன்றி- திரு.ஆ.பாடலீஸ்வரன் அவர்கள்,
              மாவட்டச் செயலாளர்,
              தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
              கரூர் மாவட்டம்.

>>>ஜூன் 22 [June 22]....

  • பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)
  • கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)
  • புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
  • சுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906)

>>>முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான முப்பருவ முழுமையான தொடர் மதிப்பீட்டு முறைக்கான முதல்பருவ பாடத்திட்டம் [Trimester Continuous and Comprehensive Evaluation Based June to September First Semester Syllabus for I-VIII Standards]

>>>Answer Keys for All Subjects for the Recruitments of Asst.Professor in Govt.Eng. Colleges, Lecturer in Govt. Polytechnics, PG Asst's & List of Candidates Called for Certificate Verification for Recruitment of PostGraduate Assistants through Employment Registration State Seniority for 2010 - 11

>>>G.O Ms. No.221, Dt :June 20,2012, MEDICAL AID – New Health Insurance Scheme, 2012 for Employees of Government and their Family Members – Selection of a Public Sector Insurance Company for implementation – Interim Arrangements for providing health care assistance till implementation of New Health Insurance Scheme, 2012 – Orders issued.

>>>அரசாணை எண்:135, நாள்:20-06-2012, அரசு ஊழியர்களின் வீட்டுக்கடன் உச்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது...[G.O Ms.No.135, Dt : June 20, 2012, Loans and Advances – House Building Advance – Enhancement of ceiling of House Building Advance from Rs.25.00 lakhs to Rs.40.00 lakhs for All India Service Officers and from Rs.15.00 lakhs to Rs.25.00 lakhs for State Government Employees – Orders – Issued.]

>>>அரசு ஊழியர்களுக்கான வீட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.25 லட்சமாக உயர்ந்தது

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக பெறும் முன்பணத்தொகை உச்சவரம்பு, 15 லட்சத்திலிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தற்போது அரசு ஊழியர்கள் சொந்தமாக வீடு கட்டும்போது, அதற்காக குறைந்த வட்டியில், எளிய தவணையில் செலுத்தும் வகையில் முன்பணம் கடனாக வழங்கப்பட்டு வருகிறது. இப்போதைய நிலையில், அரசு ஊழியர்களுக்கு, ஆறு முதல் 15 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதேபோல், ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய பணி அதிகாரிகளுக்கு, 7.5லிருந்து 25 லட்ச ரூபாய் வரை, இக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இத்தொகை வீடு கட்ட போதுமானதாக இல்லை. எனவே, இதற்கான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டுமென, அரசு ஊழியர்கள் தரப்பில், தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

அரசு அறிவிப்பு : இந்நிலையில், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கான வீட்டுக்கடன் முன்பணத்தொகைக்கான உச்சவரம்பு, 15லிருந்து 25 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், நடப்பு நிதி ஆண்டின் வரவு-செலவு திட்டத்தில், 247 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக, நிர்வாக ரீதியான அரசாணையை, வீட்டுவசதித் துறை செயலர் பணிந்திர ரெட்டி நேற்று பிறப்பித்தார்.
அரசாணை விவரம் : பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, அரசு ஊழியர்கள் வீடு கட்ட கடனாக பெறும், முன்பணத்தொகைக்கான உச்சவரம்பு, 15லிருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், அகில இந்திய பணி பிரிவு அதிகாரிகளுக்கான உச்சவரம்பு, 25லிருந்து 40 லட்ச ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த உயர்வு, இந்த ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமலாக்கப்படுகிறது. இது தொடர்பாக, ஏற்கனவே உள்ள நிபந்தனைகள் அப்படியே தொடரும். அதே சமயத்தில், நடப்பு நிதி ஆண்டில் இவ்வசதியை பெறுவோர் செலுத்த வேண்டிய வட்டி விகிதங்கள் குறித்து, நிதித்துறை மூலம் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி-தினமலர்

>>>ஜூன் 21 [June 21]....

  • சர்வதேச இசை தினம்
  • சர்வதேச மனிதநேய தினம்
  • க்ரீன்லாந்து தேசிய தினம்
  • ஆப்பிள் கணினி நிறுவனம் தனது முதல் ஐபுக்கினை வெளியிட்டது(1999)

>>>Direct recruitment of Post Graduate Assistants for Government Higher Secondary Schools 2010-11 through Employment Registration Seniority - List of Candidates called for Certificate Verification

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct recruitment of Post Graduate Assistants for Government Higher Secondary Schools 2010-11 through Employment Registration Seniority.

RELEASE OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERFICATION
The Teachers Recruitment Board is now releasing the details of the candidates who are called for the said certificate verification. The list is being released to help the right candidates, who are not in receipt of the intimation letter sent by the Board and also having their name in this list may attend the scheduled date at Teachers Recruitment Board by taking a printout from this website. This list is released based on the details received from the director of employment and Training. If any discrepancy found in list, All Queries / Clarifications relating to Employment Seniority and other issues may be got from the Director of Employment and Training, Guindy, Chennai-600 032. Ph: 22501002 / 22501006 / 22500911 / 22500900 Website: tnvelaivaaippu.gov.in
This list is being released to help the right candidates who are not in receipt of the C.V. call letter sent by this Board. The details of the candidates may be verified by giving their Employment number in the following format.
Example for Employment No: 1991F12345
2001M00123
The first 4 digit is the year of registration (1991) next is the sex of the candidate ie (Male/ Female) and the last number is a 5 digit number which was written in the Employment card, this should be 5 digit number, necessary zeros should be used as prefix if it is less than 5 digit.
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.


Dated: 19-06-2012


Chairman

>>>Direct recruitment of Graduate Assistant (Backlog Vacancies) through Employment Registration seniority for the year 2010 – 2011- List of Candidates Called for Certificate Verification

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006


Direct recruitment of Graduate Assistant (Backlog Vacancies) through Employment Registration seniority for the year 2010 – 2011
RELEASE OF LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERFICATION
The Teachers Recruitment Board is now releasing the details of the candidates who are called for the said certificate verification. The list is being released to help the right candidates, who are not in receipt of the intimation letter sent by the Board and also having their name in this list may attend the scheduled date at Teachers Recruitment Board by taking a printout from this website. This list is released based on the details received from the director of employment and Training. If any discrepancy found in list, All Queries / Clarifications relating to Employment Seniority and other issues may be got from the Director of Employment and Training, Guindy, Chennai-600 032. Ph: 22501002 / 22501006 / 22500911 / 22500900  Website: tnvelaivaaippu.gov.in
This list is being released to help the right candidates who are not in receipt of the C.V. call letter sent by this Board. The details of the candidates may be verified by giving their Employment number in the following format.
Example for Employment No: 011991F12345
292001M00123
In the format the first 2 digits represents the District code number(01) which are given here under. The second is the year of registration (1991) which is a 4 digit numbers represents their year of registration, next is the sex of the candidate ie (Male/ Female) and the last number is a 5 digit number which was written in the Employment card, this should be 5 digit number, necessary zeros should be used as prefix if it is less than 5 digit.
DISTRICT CODES
District Code No.
District
 
District Code No.
District
01
KANYAKUMARI
 
17
KARUR
02
TIRUNELVELI
 
18
PERAMBALUR
03
TUTICORIN
 
19
TIRUCHIRAPALLI
04
RAMANATHAPURAM
 
20
NAGAPATTINAM
05
SIVAGANGAI
 
21
THIRUVARUR
06
VIRUDHUNAGAR
 
22
THANJAVUR
07
THENI
 
23
VILUPPURAM
08
MADURAI
 
24
CUDDALORE
09
DINDIGUL
 
25
THIRUVANNAMALAI
10
NILGIRIS
 
26
VELLORE
11
COIMBATORE
 
27
KANCHEEPURAM
12
ERODE
 
28
THIRUVALLUR
13
SALEM
 
29
CHENNAI
14
NAMAKKAL
 
30
KRISHNAGIRI
15
DHARMAPURI
 
31
ARIYALUR
16
PUDUKOTTAI
 
32
TIRUPUR
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

 

Dated: 19-06-2012
 
Chairman

>>>தங்கள் நிலையை அறிய இங்கே சொடுக்கவும்..[Click here to Know Your Status]...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை... Things to be ...