கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>2030ல் இந்திய பல்கலை.,களில் 40 கோடி மாணவர்கள்

 
இந்தியாவில் மேற்படிப்பைத் தேர்வு செய்யும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், மேற்படிப்பைத் தேர்வு செய்பவர்களின் சதவிகிதம் கடந்த 4 ஆண்டுகளில் 12.4 சதவீதத்தில் இருந்து 20.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 40 கோடியை எட்டிவிடும் என்று தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு இணையானதாக இருக்கும் என்றார்.
எனினும், இந்த அளவு மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு தற்போதுள்ளதை விட கூடுதலாக 800 பல்கலைக்கழகங்களும், 50 ஆயிரம் கல்லூரிகளும் தேவைப்படும் எனத் தெரிவித்த அவர், இவற்றை உருவாக்குவதில் ஒரு ஆண்டு தாமதம் ஏற்பட்டாலும், பல மாணவர்களின் மேற்படிப்பு பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சிக்கான அறிவுரைகள் - விருதுநகர் மாவட்ட ஆட்சியர்/ மாவட்டத் தேர்தல் அலுவலரின் அறிவிப்பு, நாள்: 27-03-2024...

   வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சிக்கான அறிவுரைகள் - விருதுநகர் மாவட்ட ஆட்சியர்/ மாவட்டத் தேர்தல் அலுவலரின் அறிவிப்பு...