கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாணவ, மாணவியர் தற்கொலைகளை தடுக்க உத்தரவு

கல்லூரி மாணவ, மாணவியர் தற்கொலையைத் தடுக்க, கல்லூரிப் பேராசிரியர்கள், கவுன்சிலர்களாகச் செயல்பட வேண்டும் என, உயர்கல்வித் துறை கூறியுள்ளது.
கல்லூரி மாணவ, மாணவியர் தற்கொலைகள் தொடர்ந்து வருவதை அடுத்து, அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கு, உயர்கல்வித் துறை செயலர், சுற்று அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
கல்லூரி மாணவர்களின் தற்கொலைகள், அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இவற்றை உடனடியாகத் தடுக்க வேண்டும். இதற்கு, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களின் கவுன்சிலர்களாக, பேராசிரியர்கள் செயல்பட வேண்டும். கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஒருவரை, கல்லூரியின் கவுன்சிலராக நியமித்து, மாணவர்களுக்கு தொடர் கவுன்சிலிங்கை வழங்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
உயர்கல்வித் துறையின் சுற்று அறிக்கையைத் தொடர்ந்து, கல்லூரி ஆசிரியர்கள் கூட்டங்கள், முதல்வர் தலைமையில் கல்லூரிகளில் நடந்துள்ளன.
இதுகுறித்து, கல்லூரி ஆசிரியர் வசந்தி கூறியதாவது: உயர் கல்வித்துறையின் சுற்றறிக்கையில், தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் ஏற்படுத்தும் வகையில், மாணவ, மாணவியருக்கு அறிவுரைகள் கூற வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
தேர்வில் தோல்வி அடைவதால் ஏற்படும் மனச்சுமை, சக மாணவர்களுடன் ஏற்படும் மோதல்களால் உருவாகும் தனிமை, கல்விச் சுமையால் உண்டாகும் அச்சம், வீட்டுப் பிரச்னைகளால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை போன்றவற்றால் தான், மாணவர்கள் அதிகளவில் தற்கொலைகளை நோக்கிப் போகின்றனர்.
இவற்றுக்கு உரிய ஆலோசனைகளை, அவர்களுக்கு வழங்கும் வகையில், மாணவர்களுடன் மனம்விட்டுப் பேசி, பிரச்னைகளை அறிந்துகொள்ள வேண்டும். பிரச்னைகளை கண்டு கோழைத்தனமான முடிவுகளை எடுக்காமல், தைரியமாக அவற்றை எதிர்கொண்டு, அவற்றிலிருந்து வெளிவர வேண்டும் போன்ற ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
வகுப்பு ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்களை விட, மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். இந்த விஷயத்தில், அவர்கள் கவனம் செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு வசந்தி கூறினார்.
மாணவர்களிடையே அதிகமாக இருக்கும் காதல் உறவுகள், பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அதற்காக, இரு பாலரும் பணத்தைச் செலவழிப்பது, படிப்பில் ஆர்வம் குறைதல் போன்ற பிரச்னைகளில் தொடங்கி, கோழைத்தனமான முடிவுக்கு செல்வது வரை, பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு கல்லூரிகளில் கவுன்சிலிங் கொடுப்பது, எந்த அளவுக்கு சாத்தியம்; அதில், ஆசிரியர்கள் பங்கு என்ன என்பது இனித்தான் தெரியவரும். மாணவர்களோடு, பெற்றோருக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை... Things to be ...