விதிமுறை மீறி கட்டப்பட்ட 137 கல்லூரி கட்டடங்களுக்கு, கோவை உள்ளூர்
திட்டக்குழுமம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப்
பகுதிகளில் கட்டட அனுமதிக்காக, விண்ணப்பிக்கும் கல்லூரி நிர்வாகங்கள்,
அனுமதிக்கப்பட்டதை விட, அதிக தளங்கள் அமைத்து கட்டியிருப்பதும்,
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக கட்டியிருப்பதும், சமீபத்தில் உள்ளூர்
திட்டக் குழுமம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து,
இக்கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவை உள்ளூர் திட்டக்குழும
அதிகாரி ஒருவர் கூறியதாவது: விதிமுறைக்கு புறம்பாக கட்டடம் கட்டியுள்ள, 137
கல்லூரி நிர்வாகங்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான
இக்கல்லூரிகள், புறநகரில்தான் அமைந்துள்ளன. சில கல்லூரி நிர்வாகிகள்,
பஞ்சாயத்து தலைவரிடம் அனுமதி வாங்கியுள்ளனர். 2,000 சதுரடி பரப்பளவில் கடை
கட்டவும், 4,000 சதுரடி பரப்பளவில் வீடு கட்டவும் மட்டுமே, பஞ்சாயத்து
தலைவரின் அனுமதி பெற வேண்டும். சிலர் அனுமதியே வாங்காமல் பள்ளி, கல்லூரி,
தொழிற்சாலைகள் கட்டியுள்ளனர். ஒரு மாத காலத்துக்குள், கட்டடத்தின்
விதிமுறைகளை, சரி செய்து கொள்ள, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. உரிய
நடவடிக்கை எடுக்கத் தவறும் கட்டடங்களை, இடிப்பதா, "சீல்' வைப்பதா, அபராதம்
விதிப்பதா என்பதை, அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236 இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு - 30-4-2024க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்ப்பு வழங்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020254/ இ1/ 2023, நாள்: 23-04-2024...
தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236 இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு - Surplus Teacher with Post... ...