கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>செப்டம்பர் 24 முதல் டி.இ.டி மறுதேர்வு விண்ணப்பங்கள்

டி.இ.டி., மறுதேர்வுக்கான விண்ணப்பங்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படுகின்றன.
முதன்மை கல்வி அலுவலர் சிவா தமிழ்மணி தனது அறிவிப்பில், "அக்டோபர் 14ம் தேதி, டி.இ.டி., மறுதேர்வு நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 28ம் தேதி மாலை 5:30க்குள், சம்பந்தப்பட்ட பள்ளியிலேயே சமர்ப்பிக்க வேண்டும்" என, தெரிவித்துள்ளார்.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், 250 ரூபாய் கொடுத்தும், இதரபிரிவினர் 500 ரூபாய் கொடுத்தும், விண்ணப்பங்களைப் பெறலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...