கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நேர்முக தேர்வுக்கு வராதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

மீன் வளத்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்காதவர்கள், 28ம் தேதி கலந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி. செயலர் உதயசந்திரன் அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீன் வளத்துறையில், 30 மீன் வளத்துறை உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப, கடந்த 2008ல், எழுத்துத் தேர்வு நடந்தது. இதற்கான நேர்முகத் தேர்வு, கடந்த, 20ம் தேதி நடந்தது.
நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாதவர்கள், அதற்கான காரணத்தைத் தெரிவித்து, வரும் 28ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். இது குறித்த விவரங்களை, சம்பந்தபட்ட தேர்வர்கள், 27ம் தேதியே, தேர்வாணையத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இதைத் தவறவிட்டால், அதன்பின், மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...