கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

26 மாதிரி பள்ளிகள் கட்டுவதில் வந்தது சிக்கல்: நிதி ஒதுக்காததால் பணிகள் முடங்கின!

கல்வியில் பின்தங்கிய, ஒன்றியங்களில் கட்டப்பட உள்ள, 26 மாதிரிப் பள்ளிகளுக்கான திட்ட ஒதுக்கீடு, 117 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலா, மூன்று கோடி வீதம், 78 கோடி ரூபாய் மட்டுமே, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், கட்டடம் கட்ட, கூடுதலாக தலா, 1.5 கோடி ரூபாய் கேட்பதால், கட்டுமானப் பணிகள் துவங்குவதில், கால தாமதம் ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில், கல்வியில் பின்தங்கியுள்ளதாக, 44 ஒன்றியங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த ஒன்றியங்கள், அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய, 13 மாவட்டங்களில் வருகின்றன.மத்திய அரசு திட்டத்தின் கீழ், இந்த ஒன்றியங்களில், தலா ஒரு மாதிரிப் பள்ளி வீதம், இரு கட்டங்களாக, 44 மாதிரிப் பள்ளிகள் துவங்கி, கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக, 2010-11ல், 18 மாதிரிப் பள்ளிகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதில், 14 பள்ளிகளுக்கான பணிகள் மட்டும், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.  ஒப்பந்ததாரர் பிரச்னையால், இதில், நான்கு பள்ளிகளின் கட்டுமானப் பணியில், தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது.அரசுப் பள்ளிகள் வளாகத்தில் இயங்கி வரும், 18 மாதிரிப் பள்ளிகள், வரும் கல்வியாண்டில், புதிய பள்ளிகள் பட்டியலில் சேர்க்கப்படும் என, தெரிகிறது.  கல்வியில் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த, மாணவ, மாணவியருக்கென துவங்கப்பட்டுள்ள இப்பள்ளிகள், நல்ல தரத்துடன் இயங்கி வருகின்றன.கடந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தில், பெரியசிறுவத்தூர் மாதிரிப் பள்ளி மாணவி, மதுராம்பிகை, 486 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகள் அளவில், முதலிடம் பெற்றார்.  இது, அங்குள்ள கல்வித்தரத்திற்கு சாட்சியாகும். மாதிரிப் பள்ளிகளில், தற்போது, 3,537 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பணிகள் முடக்கம்:இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப் பள்ளிகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு, சட்டசபை கூட்டத் தொடரில் வெளியான நிலையில், இதுவரை பணிகளை ஆரம்பிக்கவில்லை.  ஒரு பள்ளிக்கு, மூன்று கோடி ரூபாய் வீதம், 78 கோடி ரூபாயை மட்டும், மத்திய அரசு அனுமதித்து உள்ளது.ஆனால், தற்போதுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைவாசி அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் கூடுதலாக, தலா, 1.5 கோடி ரூபாய் வீதம், மொத்தம், 117 கோடியை ஒதுக்கினால் தான், பணிகளை முடிக்க முடியும்.  இக்கட்டடங்களின், கட்டுமானப் பணியை எடுத்துள்ள காவலர் வீட்டுவசதிக் கழகம், தெளிவாக இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறது.
கால தாமதம்:கூடுதலாக தேவைப்படும், 39 கோடி ரூபாயையும், மத்திய அரசிடம் இருந்து கேட்க வேண்டுமெனில், அதற்குள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, அதற்கான நிதியைப் பெற, மிகவும் கால தாமதம் ஆகும்.எனவே, கூடுதலாக கேட்கும் நிதி ஒதுக்கீட்டு அளவை, கணிசமாக குறைக்குமாறு, மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்ககம், காவலர் வீட்டு வசதிக் கழகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.அதன்படி, தற்போது மீண்டும் ஆய்வு நடந்து வருகிறது. இதனால், திட்டமிட்டபடி, நடப்பு கல்வியாண்டில் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்...

   2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்... Academic Year 2023-2024 - Details of School Working Days... >>> தரவிறக்கம...