சென்னை, சாலிகிராமத்தில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட
நிலத்தை, வணிக நோக்கத்துக்காக மாற்றுவதற்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சாலிகிராமத்தைச் சேர்ந்த, குமார்
என்பவர் தாக்கல் செய்த மனுவில், சாலிகிராமத்தில், பள்ளி ஒன்றை
துவங்குவதற்காக, 3.59 ஏக்கர் நிலத்தை, 1953ல், அரசு ஒதுக்கியது. பள்ளி
தவிர, வேறு நோக்கத்திற்காக, இந்த நிலத்தை பயன்படுத்தக் கூடாது. அதன்படி,
1956ல், ஜெனரல் கரியப்பா பெயரில், கில்டு ஆப் சர்வீஸ், பள்ளியை துவக்கியது. பின்னர், 1968ல், 2.94 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில், ஆரம்பப்
பள்ளி துவங்கப்பட்டது. காலி இடத்தை, விளையாட்டு மைதானமாக, மாணவர்கள்
பயன்படுத்தி வருகின்றனர். இந்த இடத்தில், தொழிற் பயிற்சி மையம் நடத்த,
ஆட்சேபனை இல்லா சான்றிதழ் கோரி, பள்ளி கல்வி இயக்குனரிடம், கில்டு ஆப்
சர்வீஸ் தலைவர் அனுமதி கேட்டார்; அது, நிராகரிக்கப்பட்டது. காலியிடத்தை, மாணவர்களின் நலன்களுக்கு எதிராக பயன்படுத்த, முயற்சிகள்
நடக்கிறது. எனவே, பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, தொழில் பயிற்சி
வகுப்புகள் அல்லது வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தக் கூடாது என, உத்தரவிட
வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்" அரசுக்கு, "நோட்டீஸ்" அனுப்ப உத்தரவிட்டது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236 இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு - 30-4-2024க்குள் கூடுதல் மாணவர்களை சேர்த்துவிட்டால் பணிநிரவலில் இருந்து தவிர்ப்பு வழங்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020254/ இ1/ 2023, நாள்: 23-04-2024...
தொடக்கக்கல்வி துறையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள 2236 இடைநிலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நிரவல் கலந்தாய்வு - Surplus Teacher with Post... ...