கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அண்ணா பல்கலையில் ஒருங்கிணைந்த பொறியயில் - மேலாண்மை படிப்பு

உலகப் பல்கலைக்கழகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களின் வழியைப் பின்பற்றி, ஒருங்கிணைந்த பொறியியல்-மேலாண்மைப் படிப்பை, அண்ணா பல்கலையில் வழங்குவதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பொறியியல் படிப்பை முடித்தப்பிறகு, மேலாண்மை படிக்கவிரும்பும் மாணவர்களுக்கான ஒரு சிறந்த வாய்ப்பாக இப்படிப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்த பொறியியல் மாணவர்களுக்கும், மேலாண்மைத் திறன்களை வழங்குவதை இப்படிப்பு நோக்கமாக கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது, ஒரு பொறியியல் பட்டதாரி, தொழில்துறையின் தேவைக்கேற்ப தயாராகி இருக்க வேண்டும் மற்றும் ஒரு தொழில்முனைபவராக உருவாகும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பில் மொத்தம் 10 செமஸ்டர்கள்(அகடமிக்) உண்டு. இதையடுத்து, பொறியியல் மாணவர்களுக்கான, தொழில்துறை இன்டர்ன்ஷிப் செமஸ்டரும்(6 மாதங்கள்) உண்டு. இப்படிப்பில் 3 ஆண்டுகள் நிறைவுசெய்த ஒருவர், பொறியியல் படிப்பில் இளநிலைப் பட்டத்தைப் பெறுகிறார். அதை முடித்ததும், அவர் வெளியேறிச் சென்று எங்கேனும் சிறிதுகாலம் பணிபுரிந்து அனுபவம் பெற்று, பின்னர் மீண்டும் வந்து 4ம் வருட படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். இதுதொடர்பாக, அண்ணாப் பல்கலை துணைவேந்தர் காளிராஜ் கூறியதாவது: இந்த புதிய படிப்பு தொடர்பான செயல்திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்து கொண்டுள்ளோம். இந்தப் படிப்பிலுள்ள, "வெளியே சென்று அனுபவம் பெற்று பின்னர் திரும்பி வந்து படித்தல்" என்ற சலுகையால், படிப்பை பாதியிலேயே கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். ஏனெனில், பல மாணவர்கள் பொறியியல் பட்டம் பெற்றால் போதுமென நினைத்து திரும்ப வரமாட்டார்கள் என்றார். தற்போதைய நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில், M.Sc., Computer science பிரிவில் மட்டுமே ஒருங்கிணைந்த(Integrated) படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய படிப்பிற்கு தனி நுழைவுத் தேர்வு தேவை என்று சில கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் கட்-ஆப் குறைவாக இருந்தால், மெக்கானிக்கல் பொறியியல் படிப்பு கிடைக்காத ஒரு மாணவர், இப்படிப்பை நாடி வருவார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தம் 5.5 வருடங்களைக் கொண்ட, இந்த இணைப்புப் படிப்பை, அடுத்த 2013 முதல் வழங்க விரும்பும் Affiliated கல்வி நிறுவனங்கள், தன்னிடம் விண்ணப்பிக்கலாம் என, சமீபத்தில், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்(AICTE) அறிவித்தது. அதன்படி, 500 கல்வி நிறுவனங்கள் வரை விண்ணப்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை... Things to be ...