கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சிறப்பு அந்தஸ்தை இழக்கும் சென்னை பல்கலை உயிர் இயற்பியல் துறை

உலகளவில் புகழ் பெற்ற, சென்னை பல்கலை படிகவியல் மற்றும் உயிர் இயற்பியல் துறைக்கு, போதிய பேராசிரியர்கள் இல்லாததால், விரைவில் சிறப்பு அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு அந்த துறை தள்ளப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தில், 1952ம் ஆண்டு படிகவியல் மற்றும் உயிர் இயற்பியல் துறையை, நோபல் பரிசு பெற்ற சர்.சிவி.ராமனின் ஆராய்ச்சி மாணவரான பேராசிரியர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இத்துறையின் முதல் ஆராய்ச்சியையும், அவர் துவங்கினார். மிருகங்களில் காணப்படும் புரத தொகுப்பு (கொலாஜன்), ராமச்சந்திரன் வரைபடம் உள்ளிட்ட இவரின் கண்டுபிடிப்புகளுக்கு, உலகளவில் வரவேற்பு கிடைத்தது. ஆராய்ச்சியாளர்களின் பாராட்டால், இவர் துவக்கிய துறைக்கு, சிறப்பு அங்கீகாரம் கிடைத்தது. நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்ட இவரது கண்டுபிடிப்புகள், பல விருதுகளையும் பெற்றன.இத்துறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளால், பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.,) 1963ம் ஆண்டு, "உயர் ஆராய்ச்சி மையம்" என்ற சிறப்பு அந்தஸ்தையும் கொடுத்தது. இதன் மூலம், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் இத்துறை வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு, ஆராய்ச்சி மாணவர்கள் 20 பேருக்கு, சிறப்பு ஊக்க தொகையாக, மாதம் 14,000 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.இந்நிலையில், 1971ம் ஆண்டு, பல்வேறு சூழ்நிலைகளால், பேராசிரியர் ராமச்சந்திரன், சென்னை பல்கலைக் கழகத்தில் இருந்து விலகி, பெங்களூர் இந்திய ஆராய்ச்சி கழகத்தில், மூலக்கூறு மற்றும் உயிர் இயற்பியல் துறையை துவக்கினார். இவரது விலகலை அடுத்து, சொல்லிக் கொள்ளும்படியான ஆராய்ச்சிகள் இத்துறையில் மேற்கொள்ளப்படாததாலும், பேராசிரியர்கள் பற்றாக்குறையாலும் யு.ஜி.சி., வழங்கிய, "உயர் ஆராய்ச்சி மையம்" என்ற சிறப்பு அந்தஸ்தை இத்துறை இழந்தது. இதை தொடர்ந்து, மற்ற துறைகள் போல, 2007ம் ஆண்டு வரை சாதாரண துறையாகவே செயல்பட்டது. ஆராய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆராய்ச்சி உண்மை பயன்கள், கண்டுபிடிப்பு விளைவுகள் உள்ளிட்ட காரணங்களால், 2007ல் மீண்டும் இத்துறை சிறப்பு அந்தஸ்தை பெற்றது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இந்த அந்தஸ்தை பெற, குறைந்தபட்சம் ஆறு பேராசிரியர்கள் துறையில் இருக்க வேண்டும். சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெற்ற போது, எட்டு பேராசிரியர்கள் இருந்தனர். நான்கு பேராசிரியர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து, மீதமுள்ள நான்கு பேராசிரியர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். பேராசிரியர்கள் பற்றாக்குறையால், நடப்பாண்டில், இத்துறை சிறப்பு அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.விளம்பரம்சென்னை பல்கலைக் கழகத்தில், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ளபேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, விளம்பரம் கொடுக்கப்பட்டது. இன சுழற்சி முறையை பின்பற்றவில்லை என பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனால், இத்துறையிலும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதுகுறித்து, துறை தலைவர் வேல்முருகன் கூறியதாவது: உலகளவில், சென்னை பல்கலைக் கழகத்தில் மட்டுமே, படிவியல் மற்றும் உயிர் இயற்பியல் துறை உள்ளது. மூலக்கூறுகளின் செயல்திறன் அறிதல், கட்டுப்படுத்துதல், மூலக்கூறு வடிவமைத்தல், முப்பரிமாண வடிவமைப்பு, புதிய மருந்துகள் வடிவமைப்பு செய்தல் உள்ளிட்ட ஆராய்ச்சிகள் இத்துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. நோபல் பரிசு பெற்ற, 30 ஆராய்ச்சியாளர்கள் இத்துறையை பார்வையிட்டு உள்ளனர். சென்னை பல்கலைக் கழகத்தில், தாவரவியல், கணிதம், படிகவியல் மற்றும் உயிர் இயற்பியல் உட்பட மூன்று துறைக்கு மட்டுமே இந்த சிறப்பு அந்தஸ்து உள்ளது.இத்துறைக்கு, 18 ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. தற்போது, நான்கு பேர் மட்டுமே உள்ளனர். எனவே, சிறப்பு அந்தஸ்தின் முக்கியத்துவம் கருதி, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரி, உயர் கல்வி துறை அமைச்சர் பழனிப்பன், உயர்கல்வி துறை செயலர் ஸ்ரீதர், பல்கலை துணைவேந்தர் ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டு உள்ளது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் இதில் எடுக்கப்படவில்லை.தற்போது உள்ள நான்கு பேராசிரியர்களில், விரைவில் இருவர் ஓய்வு பெற உள்ளனர். இதனால், இத்துறை விரைவில் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்படும். உலகளவில் முக்கியம் பெற்ற இத்துறையை அழிவிலிருந்து மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை... Things to be ...