கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தனியார் பள்ளிகள் புதிதாக துவங்க டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம்

"புதிய தனியார் பள்ளிகள் துவங்க, டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம்' என, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்தது. தற்போது, மாநிலம் முழுவதும், 4,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அரசுப் பள்ளிகள் அதிகம் துவங்கப்பட்டாலும், தனியார் பள்ளிகளின் வளர்ச்சி வேகம் குறையவில்லை. ஆண்டுதோறும், 50 முதல், 70 புதிய பள்ளிகள் துவங்கப்படுகின்றன. இந்நிலையில், வரும் கல்வியாண்டில் (2013-14), புதிய பள்ளிகளை துவக்க விரும்புவோர், டிச., 31க்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளி அமைவிடம், முகவரி உள்ளிட்ட முழுமையான ஆவணங்கள் அடங்கிய இரு கோப்புகளை தயார் செய்து, மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர், ஆவணங்களை ஆய்வு செய்து, அதன்பின், இயக்குனரகத்திற்கு பரிந்துரைப்பார். இயக்குனரகம், ஆவணங்களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும். வரும் கல்வியாண்டில், 50 புதிய பள்ளிகள் துவங்க, விண்ணப்பங்கள் வரலாம் என, எதிர்பார்ப்பதாக, இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாடாளுமன்றத் தேர்தல் 2024 - மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டியவை...

  நாடாளுமன்றத் தேர்தல் 2024 - மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டியவை... Parliamentary Elections 2024 - To be handed over to Zonal Officer... &...