கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>சரித்திரம் பயில்வோம்! - வெ.இறையன்பு

இப்போதெல்லாம் பள்ளிகளில் அறிவியலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் சரித்திரத்துக்குக் கொடுப்பதில்லை. இலக்கியத்துக்கு இடமே இல்லை. வரலாறும் இலக்கியமும் படித்தால் வேண்டிய படிப்புக்கு விண்ணப்பம் போட முடியுமா என்று மாணவர்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

வரலாறு, இலக்கியம் பண்டங்களல்ல, பாத்திரங்கள். உணவை உண்ணுகிற பாத்திரம் நிறைவு செய்வது போல, அவை முழுமையான வாழ்க்கை நெறியை வழங்குகின்றன.

வரலாறு நூல்களைத் தேர்வு செய்து படிக்கும் போது, கதைப்புத்தகத்தைப் போல கலகலப்பூட்டு கிறது. பாடப்புத்தகங்களில் மதிப்பெண்களுக்காகப் படிக்கிற போது கவிதைகள் கூட கந்தகமாகிவிடுகின்றன. விருப்பத்துடன் வாசிக்கின்றபோது கந்தகம் பற்றிய குறிப்பு கூட சந்தனமாகிவிடுகிறது.

சுவாரசியமான பல சரித்திர நூல்கள் எழுதப் பட்டிருக்கின்றன. சரித்திரத்தை இலக்கியங்கள் மூலமும் வாசிக்கமுடியும். ஷேக்ஸ்பியர், மார்லோ, பெர்னாட்ஷா ஆகியோருடைய பல நாடகங்கள் சரித்திரத்தின் பதிவுகள், வரலாற்றின் பிழிவுகள்.

மாபெரும் மன்னர்களின் வீழ்ச்சிக்கு ஒரே ஒரு தவறால் நிகழந்ததை நமக்கு அவை உணர்த்துகின்றன. அதீத நம்பிக்கையால் ஜூலியஸ் சீசர் கத்திகளின் உத்திகளுக்குப் பலியானார். ஹேம்லெட் முடிவெடுக்காமல் தடுமாறியதால் தள்ளாடினார். மேக்பெத் அதிக அவாவால் அழிந்தான். நெப்போலியன் சரியாகத் திட்டம் இடாததால் தொய்வுற்றார். ஹிட்லர் அகங்காரத்தால் அழிந்தார்.

சரித்திரத்தை எவ்வளவு நாம் புறக்கணித்தாலும் அவை திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏன், நம் வாழ்வில் கூட மீண்டும் பழைய தவறுகளையே நாம் செய்து கொண்டே இருக்கிறோம். விழுந்த இடத்திலேயே விழுகிறோம்.

தலைமைப் பண்பை உறிஞ்சிக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு, சரித்திரம் அகராதி. மேன்மையான உயர்ந்த குணங்கள் சிலரை உச்சாணிக் கொம்பிலே அமர்த்தியதை வரலாற்றை வாசிப்பதிலிருந்து கிரகித்துக் கொண்டு நாமும் அவற்றை நோக்கி பயணிப்பதற்கு நம்மை அவை உசுப்பி விடுகின்றன.

மகாத்மா காந்தி எத்தனைப் போராட்டங்களைச் சந்தித்தார் என்பதைத் தெரிந்து கொள்கிறபோதுதான், மாதப் பரீட்சைக்கே மனமொடியும் நாம் நம்மைத் திருத்திக்கொள்ள முடியும். வைராக்கியம் வளர்க்கவும், இடறாமல் இருக்கவும் சாதனை செய்தவர்களின் சரித்திரச் சான்றுகள் நமக்கு என்றும் உறுதுணை புரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

 வாக்குப்பதிவு முடிவுற்றவுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பொருட்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை... Things to be ...