கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பட்டதாரிகள் தொழில் துவங்க கடன்

பட்டதாரிகள் தொழில் துவங்க, ஒரு கோடி ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தை, அரசு அறிவித்துள்ளது. பொது பிரிவினர் 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள், ஆதிதிராவிடர் பழங்குடியினர், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், சீர் மரபினர், திருநங்கைகள் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் வரைமுறை இல்லை. மற்ற திட்டங்களில் மானிய கடன் பெற்றிருந்தால், விண்ணப்பிக்க முடியாது. திட்ட மதிப்பீட்டில் 25 சதம் மானியம், ஒரு மாத தொழில் முனைவோர் கட்டாய பயிற்சி வழங்கப்படும். அந்தந்த மாவட்ட தொழில் மையம், தொழில் முதலீட்டுக் கழக அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...