கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>"ஸ்லெட்' தேர்வு முடிவு எப்போது?

"கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு, விரைவில் அறிவிக்கப்படவுள்ளதால், "ஸ்லெட்' தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், கல்லூரிகளில் பேராசிரியர் பணியில் சேர, மாநில அளவிலான தகுதித்தேர்வு (ஸ்லெட்) அல்லது தேசிய அளவிலான தகுதித்தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற வேண்டும் என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) விதிமுறை வகுத்துள்ளது. அதன்படி, மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் மூலம் தகுதித்தேர்வு நடத்தி வருகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான, "ஸ்லெட்' தேர்வு, கோவை பாரதியார் பல்கலை மூலம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும், 62 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 76 மையங்களில், அக்., 7ம் தேதி தேர்வு நடந்தது; 51 ஆயிரத்து 500 பேர் பங்கேற்று, 27 பாடப்பிரிவுகளில் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு, ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியிடப்படவில்லை. கல்லூரி ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள நிலையில், "ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பத்தை பெற முடியும். எனவே, "ஸ்லெட்' தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும் என, தேர்வெழுதியோர் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்வு அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்கலை மாணவர் சேர்க்கை, தேர்வு போன்ற வழக்கமான பணிகளுக்கு இடையே, "ஸ்லெட்' தேர்வு விடைத்தாள் திருத்த வேண்டியுள்ளதே, தாமதத்துக்கு காரணம். கம்ப்யூட்டர் பிரிவில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விரைவில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...