கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நிலுவை உதவித்தொகை: விரைவில் வழங்க புதுச்சேரி அமைச்சர் உறுதி

ஆதி திராவிட மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள ஸ்காலர்ஷிப் தொகை விரைவில் வழங்கப்படும் என புதுச்சேரி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜவேலு கூறினார்.
புதுச்சேரியில், ஆதி திராவிட நல மாநில அளவிலான குழு கூட்டம், ஓட்டல் அண்ணாமலையில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். நலத்துறை அமைச்சர் ராஜவேலு முன்னிலை வகித்தார்.
ஆதி திராவிடர் தேசிய கமிஷன் துணை இயக்குனர் ராமசாமி, அரசு தெரிவு உறுப்பினர்கள் 18 பேர், அரசு சாரா உறுப்பினர்கள் 26 பேர், அரசின் சிறப்பு அழைப்பாளர்கள் 18 பேர், அரசு சாரா சிறப்பு அழைப்பாளர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.
ஆதி திராவிட மக்களுக்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் குறித்தும், ஆதி திராவிட துணைத் திட்டத்தின் செயல்பாடு, ஆதி திராவிட மக்களுக்கு அரசுப் பணி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் தொடர்பாகவும், ஆதி திராவிட மக்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்தும் அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கலந்தாய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க, அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், கார்த்திகேயன், பாட்கோ சேர்மன் பிரசாந்த்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாரிமுத்து, நீல கங்காதரன், தெய்வநாயகம், நலத் துறை செயலர் விவேக் பாண்டே, கலெக்டர்கள் தீபக்குமார், அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நலத்துறை அமைச்சர் ராஜவேலு பேசுகையில், "ஆதி திராவிட மக்களுக்கான சிறப்புக் கூறு நிதி, சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதைக் கண்காணிக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள ரூ.18 கோடி ஸ்காலர்ஷிப் தொகை ஓரிரு தினங்களில் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் ஆதி திராவிட மக்களின் சேதமமைடந்த வீடுகளை இந்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
அதன் அடிப்படையில், ஹட்கோ உதவியுடன் ரூ.4 லட்சத்தில் வீடு கட்டிக்கொள்ள ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டார்.

>>>அரசு விடுதிகளுக்கும் சிலிண்டர் விலை உயர்வு

அரசு மாணவர் விடுதிகளுக்கு வழங்கும் எரிவாயு சிலிண்டர்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால், ஒதுக்கப்படும், உணவு செலவுக்குள், உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிற்பட்டோர், ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு துறை என 2,000க்கும் மேற்பட்ட அரசு விடுதிகள் உள்ளன. இதில், தங்கி படிக்கும் ஒரு மாணவருக்கு காய்கறி, பருப்பு, எரிவாயு செலவு உட்பட கல்லூரி விடுதி என்றால் மாதம் ரூ.750, பள்ளி விடுதி என்றால் மாதம் ரூ.650 வீதம், உணவுச் செலவாக அரசு வழங்குகிறது.
சமீபத்தில் ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் விலை உயர்வு, அரசு விடுதிகளையும் பாதித்துள்ளது. இதுவரை விடுதிகளுக்கு ரூ.390க்கு வழங்கப்பட்ட மானிய சிலிண்டருக்கு பதிலாக, இனி வர்த்தக சிலிண்டர், ரூ.1045க்கு வழங்கப்படுகிறது. இது கடந்த 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என, விடுதிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சராசரியாக நூறு மாணவர்கள் உள்ள ஒரு விடுதியில், மாதம் குறைந்தபட்சம் 20 சிலிண்டர்கள் தேவைப்படும். விடுதிகளுக்கு அரசு வழங்கும் உணவு செலவில் எவ்வித மாற்றமும் அறிவிக்கவில்லை. "அரசு வழங்கும் பணத்தை சிலிண்டருக்கு மட்டுமே கொடுத்துவிட்டால், மாணவர்களுக்கு உணவு எப்படி சமைப்பது" என்று, விடுதி காப்பாளர்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
இதுகுறித்து, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில துணை செயலாளர் ஜான் கூறுகையில், "தற்போது வழங்கப்படும் உணவு செலவு தொகையை, அண்மையில் தான் அரசு உயர்த்தியது. இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வு எங்களுக்கு சிக்கலாய் மாறியுள்ளது. ஒரு சிலிண்டருக்கு உயர்த்தப்பட்டுள்ள 655 ரூபாயை, அரசு ஏற்க வேண்டும்" என்றார்.

>>>வி.ஏ.ஓ. தேர்வு: தமிழகம் முழுவதும் 9.72 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும், 4,000 மையங்களில், இன்று வி.ஏ.ஓ., போட்டித் தேர்வு நடக்கிறது. 9.72 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். பதற்றம் நிறைந்த மையங்களாக கருதப்படும், 150 இடங்களில், வெப் கேமரா வழியாக, சென்னையில் இருந்தபடி கண்காணிக்கவும், தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.
வி.ஏ.ஓ., பதவியில் காலியாக உள்ள, 1,870 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, ஜூலையில் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதற்கு, 9.72 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இன்று காலை, 10 மணிக்குத் தொடங்கி மதியம் ஒரு மணி வரை, தேர்வு நடக்கிறது. 4,000 மையங்களில் நடக்கும் தேர்வை, வீடியோவில் பதிவு செய்ய, தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்வில், எவ்வித முறைகேடும் நடக்காத அளவிற்கு, பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தேர்வாணையம் எடுத்துள்ளது.

>>>டி.இ.டி. மறுதேர்வு: 13 ஆயிரம் பேர் விண்ணப்பம்

டி.இ.டி. மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், ஆயிரத்து 793 பேரும், குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 296 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் முதல், ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
டி.இ.டி. மறுதேர்வு, அக்டோபர் 14ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே நடந்த தேர்வில், தோல்வியடைந்தவர்கள் மட்டும், மறுதேர்வில் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., அறிவித்தது. இதையடுத்து, புதிய விண்ணப்பதாரர்களுக்கும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் விவரங்களை, நேற்று இரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது.
அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 13 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

>>>மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த உத்தரவு

மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களின், தமிழ், ஆங்கில கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வழக்கமாக கட்டுரையின் தலைப்பு மற்றும் அதற்கான முழு தகவல்களையும், ஆசிரியர்களே கொடுத்து விடுவார்கள். இதனால் மாணவர்களின் சிந்திக்கும், எழுதும் திறன் வளர்வதில்லை.
இனிமேல், கட்டுரையின் தலைப்பை மட்டுமே ஆசிரியர்கள் வழங்குவார்கள், அதற்கான அனைத்து தகவல்களையும் அவர்களே தொகுத்து, சொந்த நடையில் எழுத வேண்டும். கட்டுரையை மதிப்பீடு செய்து, அதற்கு மதிபெண் வழங்கப்படும்.
கட்டுரையின் நிறை,குறைகளை கூறி மாணவர்களின் எழுதும் திறனை மேம்படுத்த வேண்டும். சிறந்த கட்டுரையை வகுப்பறை மற்றும் கூட்டு பிரார்த்தனையின் போது மாணவர்களை வாசிக்க வைத்து உற்சாகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>7% அகவிலைப்படி உயர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மத்திய அரசு போல மாநில அரசும் ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தித் தரவேண்டும், என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் எஸ்.பாஸ்கரன் கூறியதாவது: எப்போதெல்லாம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம், மாநில அரசும் உயர்த்தி வழங்கும்.
சமீபத்தில் மத்திய அரசு, 7% அகவிலைப்படி உயர்வை அறிவித்து, 65% அகவிலைப்படியை 72 சதவீதமாக்கியுள்ளது. அதேபோல மாநில அரசும் வழங்க வேண்டும். மேலும் இதில், 50% அடிப்படை சம்பளத்துடன் இணைத்து அறிவிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

>>>புதுச்சேரி மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் மனிதவள மேம்பாட்டு பயிற்சியை இலவசமாக அளிக்க புதுச்சேரி மனிதவள மேம்பாட்டு பயிற்சி மற்றும் ஆலோசனை மையம் திட்டமிட்டுள்ளது.
புதுவை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் மனிதவள மேம்பாடு பயிற்சி நடத்தப்பட உள்ளது.
தன்னம்பிக்கை, மனக்கட்டுப்பாடு, உலக அளவில் சாதித்தவர்களின் வரலாறுகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித்தேர்வுகள் குறித்த விளக்கம் போன்ற பல தலைப்புகளில் இந்த பயிற்சி இலவசமாக நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சியை நடத்த விரும்பும் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் கடிதம் அனுப்பி தங்களை பதிவு செய்து கொள்ளலாம். இயக்குனர், மனிதவள மேம்பாட்டு பயிற்சி மற்றும் ஆலோசனை மையம், 72, முதல் குறுக்குத்தெரு, ஆனந்த ரங்கபிள்ளை நகர், புதுச்சேரி௮ என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>செப்டம்பர் 30 [September 30]....

  • சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்
  • போட்ஸ்வானா விடுதலை தினம்(1966)
  • தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)
  • உலகின் முதலாவது நீர்மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1882)
  • பாகிஸ்தான், ஏமன் ஆகியன ஐநாவில் இணைந்தன(1947)

>>>பாரதிதாசன் பல்கலை.,யில் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமுள்ளவர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூர கல்வியில் பி.எட். பயில விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்களும், ஒரே துறையில் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை www.bdu.ac.in எனும் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாயை செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை அக்டோபர் 7ம் தேதிக்குள் கிடைக்குமாறு, The Director, Centre For Distance Education, Bharathidasan University, Palkalai perur Campus, Trichy-620024 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.bdu.ac.in எனும் இணையதளம் அல்லது 0431- 2407027, 0431- 2407054, 0431- 2407028, 0431- 2407072 எனும் தொலைபேசி எண்களையும் அணுகலாம்.

>>>பணிமாறுதல், சம்பள பிரச்னையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்: இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

"பணிமாறுதல், சம்பளம் தொடர்பான வேண்டுகோளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்,' என, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
மதுரையில் இந்த ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது. செயலாளர் ராபர்ட், பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் பிலிப்குணசேகரன், வின்சென்ட் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கூறியது: தமிழகத்தில் 2009ல், இடைநிலை ஆசிரியர்களை மாநில அளவிலான பதிவுமூப்பின் அடிப்படையில் நியமித்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது, வேறு மாவட்டத்திற்கு செல்லக்கூடாது, என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்தது. தற்போது, இதை நீக்க அரசு முயற்சிக்க வேண்டும் என 7 ஆயிரம் பேர், அரசிடம் கோரிக்கை விடுத்தோம். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் ஆண்டுதோறும் கவுன்சிலிங் மூலம் விரும்பும் இடத்திற்கு பணிமாறுதல் பெறும்போது, நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எங்களில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் பலர் உள்ளனர். இருந்தும் நான்கு ஆண்டுகளாக அரசிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. அடுத்த பிரச்னையாக, சம்பள விகிதத்திலும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஐந்தாவது ஊதியக்குழுவில் "பி' பிரிவில் இருந்த எங்களுக்கு, 6வது ஊதியக்குழுவில் "டி' பிரிவு ஊழியர்களுக்கு இணையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் எங்களைவிட ஒருநாள் முன்னதாக பணிநியமனம் செய்யப்பட்டவர், ரூ.11 ஆயிரம் அதிகமாக சம்பளம் பெறுகிறார். பெற்றோரை கவனிக்க இயலாது, தொலைதூர மாவட்டங்களில் பணியாற்றும் எங்களுக்கு பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். சம்பள வேறுபாட்டையும் களைய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

>>>"ஹால் டிக்கெட்' வழங்குவதில் கால தாமதம்: மாணவர் மயக்கம்; டி.பி.ஐ.,யில் பரபரப்பு

பிளஸ் 2 தனி தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, தேர்வுத் துறை இயக்குனரக வளாகத்தில் நேற்று, "ஹால் டிக்கெட்' வழங்கப்பட்டது. உடனுக்குடன், "ஹால் டிக்கெட்' வழங்க ஏற்பாடு செய்யாததால், பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த மாணவ, மாணவியர் பலர், மயக்கம் போட்டு விழுந்தனர்.
குவிந்த மாணவர்கள்: அக்டோபர், 4ம் தேதி முதல், 16ம் தேதி வரை, பிளஸ் 2, தனி தேர்வு நடக்கிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், இதில் பங்கேற்கின்றனர். "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தேர்வு துறை இயக்குனர் அலுவலகத்தில், நேற்றும், இன்றும், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், நேற்று தேர்வுத்துறை அலுவலகத்திற்கு வந்தனர். "ஆன்-லைன்' வழியில் விண்ணப்பித்ததற்கான சான்றை காட்டி, "ஹால் டிக்கெட்' பெற, அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தேர்வுத்துறை மெத்தனம்: ஆனால், இவர்களுக்கு உடனுக்குடன், "ஹால் டிக்கெட்' வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்யவில்லை. ஒரே ஒரு, "கவுன்டரில்' மட்டும், "ஹால் டிக்கெட்' வழங்கப்பட்டதால், மாணவரும், பெற்றோரும், நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ, கூடுதல், "கவுன்டர்'கள் மூலம், "ஹால் டிக்கெட்' வழங்கவோ, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரே ஒரு பெண் போலீஸ் அதிகாரி மட்டும், மர நிழலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். திருப்போரூரைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்ற மாணவர், நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்ததால், பிற்பகல் 2:00 மணிக்கு, மயக்கம் போட்டு சரிந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அங்கிருந்தவர்கள், தண்ணீர் தெளித்து, "ஜூஸ்' வாங்கிக் கொடுத்தனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து வந்த வள்ளி என்பவர் கூறுகையில், ""என் மகளுக்கு, "ஹால் டிக்கெட்' பெறுவதற்காக, காலையில் வந்தோம்; இதுவரை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில், என் மகளும், மயக்கம் போட்டு விழுந்து விட்டாள். ஒரு, "கவுன்டரில்' கூட, தொடர்ந்து, "ஹால் டிக்கெட்' வழங்கவில்லை,'' என்றார்.
அதிகாரி பதில்: தேர்வு துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை) கூறுகையில், ""2,000 பேர், "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பித்தனர். நாளைக்கும், "ஹால் டிக்கெட்' வழங்குகிறோம். ஒரே நாளில், பாதிக்கும் மேற்பட்டோர் வந்து விட்டனர். அனைவருக்கும் விரைவில், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும்,'' என்றார்.

>>>மெழுகு பூச்சு தாள் ரசீதுகளால் பிரச்னை: குவிகின்றன புகார்கள்

தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கும், மெழுகு பூச்சு விற்பனை ரசீதுகளில் உள்ள விவரங்கள், விரைவில் அழிந்து விடுவது குறித்த புகார்கள் அதிகரித்து வருகின்றன.

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் தங்களிடம் வாங்கும் பொருட்களுக்கான விற்பனை ரசீதை, மெழுகு பூச்சு தாளில் (Wax Coated Paper) வழங்கி வருகின்றன. பல்பொருள் அங்காடி, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், ஏ.டி.எம்., மையத்தில் வழங்கப்படும் பரிமாற்ற விவர ரசீது, தொலைதூர மற்றும் மாநகர பேருந்துகளில் வழங்கப்படும் பயணசீட்டு உள்ளிட்டவை, மெழுகு பூச்சு தாளில் தான் வழங்கப்படுகின்றன. கையடக்க கம்ப்யூட்டரில் தரப்படும் ரசீது ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் இத் தாளை மாற்றி, சாதாரண வெள்ளைத் தாள் ஆக்குவது எனில், அதற்கு தொழில்நுட்ப முறைகள் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. இவற்றில் பதியப்படும் விவரங்கள், ஒரு வாரம் அல்லது அதிகபட்சமாக, 10 நாட்களுக்குப் பின், மறைந்து, வெற்று வெள்ளைத் துண்டு சீட்டாகி விடுகின்றன. இதனால், சேவை தொடர்பான பிரச்னைகள் எழும்போது, அதுகுறித்து, வாடிக்கையாளர்கள், புகார் அளிப்பதில் சிக்கல் எழுகிறது. அதேசமயம் வீட்டு வரி போன்ற முக்கிய ரசீதுகள் தரும்போது, சில இடங்களில், தாங்கள் தரும் ரசீதுகளை லேசர் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். ஆனால், பலரும் தங்கள் வேலை முடிந்ததும், மறந்து விடுகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர் சடகோபன் கூறியதாவது: உத்தரவாதத்துடன் ஒரு பொருளை வாங்கும் வாடிக்கையாளருக்கு, விற்பனைக்கான ஆதாரம், ரசீது தான். மெழுகு பூச்சு தாளில் பதியப்பட்டு, விற்பனை ரசீது வழங்குவது, நுகர்வோர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்; இப்பிரச்னைக்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையிடம், பலமுறை முறையிட்டும், எந்த பலனும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்பிரச்னை குறித்து, இதுவரை அரசுக்கு எவ்வித புகாரும் வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களோ அல்லது புகார்களை பெற்றிருக்கும் நுகர்வோர் அமைப்புகளோ புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதே சமயம் தனியார் முன்னணி நிறுவனங்கள் சில, தங்கள் வாடிக்கையாளர்கள் அதிக அளவு பணம் தந்து வாங்கும் பொருட்களுக்கு அழியாத வகையில் உள்ள பூச்சு கொண்ட ரசீதை வழங்கும் நடைமுறைகளையும் கொண்டிருக்கின்றன. இப்பிரச்னை குறித்த புகார்கள் அதிகரிப்பதால், இதற்கு தீர்வு காண வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

>>>இருக்க வேண்டும் இரும்பு இருதயம்: இன்று உலக இருதய தினம்

 
உடல் உறுப்புகளில் இருதயம் முக்கியமானது. இருதய துடிப்பு இருக்கும் வரைதான், உயிர் துடிப்பும் இருக்கும். உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை அனுப்பும் வேலையை, இருதயம் செய்கிறது. இருதயத்தில் ஏற்படும் கோளாறுகளால், இறப்பவர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இருதயத்தை பாதுகாப்பது பற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, செப்.,29ம் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இருதய நோய்களில் 80 சதவீத மாரடைப்புகள் தடுக்கப்படக் கூடியவை.
இதுவே அதிகம்:
உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இருதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம். ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இறக்கின்றனர். மலேரியா, எச்.ஐ.வி., மற்றும் டி.பி., ஆகியவற்றால் 38லட்சம் பேர் மட்டுமே இறக்கின்றனர். இதிலிருந்து இருதய நோயின் பாதிப்பு எந்தளவு உள்ளது என தெரிந்து கொள்ளலாம் என, உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. உலகில் ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள், பிறக்கும் போதே இருதய குறைபாட்டுடன் பிறக்கின்றன. உலகில் 10 மாணவர்களில் ஒருவர், அதிக எடை உள்ளவர்களாக உள்ளனர்.

என்ன காரணம்:
முறையற்ற உணவு பழக்க வழக்கம், அதிக நேர பணி, உழைப்பின்மை, நிம்மதியின்மை போன்றவை இருதய நோய்க்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கின்றன. அதேபோல், உலகில் மாரடைப்பால் இறப்பவர்களில் 20 சதவீதம் பேர் புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட, புகை பிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. புகை பிடிப்போர், வெளியிடும் புகையினால் அருகில் உள்ளவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆண்டுக்கு சிறுவர்கள் உட்பட 6 லட்சம் பேர், இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.

மாரடைப்பை தடுப்பது எப்படி
* புகை பிடிப்பதை முற்றிலும் கை விடுங்கள். பெண்களுக்கு வீட்டு வேலை செய்வதே உடற்பயிற்சி செய்வதற்கு சமம். எனவே, முடிந்தளவுக்கு உடம்புக்கு வேலை கொடுங்கள்.
* உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் பயன்படுத்தாதீர்கள். இதனால் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* சைக்கிள் ஓட்டுவது நல்லது.
*இனிப்பு வகைகளை சாப்பிட விரும்பினால் சாக்லேட்டிற்கு பதிலாக, மாம்பழம் எடுத்துக்கொள்ளுங்கள். ரத்தத்தில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க வேண்டும்.
*பெரும்பாலான நேரங்களில், "எஸ்கலேட்டர்',"லிப்ட்' ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப் படிகளை பயன்படுத்த வேண்டும். ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.
* "பாஸ்ட் புட்' உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதில் கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், பருப்பு வகைகள், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் ஆகியன, ஓய்வின்றி உழைக்கும் இருதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கின்றன.

>>>செப்டம்பர் 29 [September 29]....

  • சர்வதேச காபி தினம்
  • அர்ஜெண்டீனா கண்டுபிடிப்பாளர்கள் தினம்
  • ஓமன், அரபுக் கூட்டமைப்பில் இணைந்தது(1971)
  • ஜான் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்(1916)
  • கனடாவின் முதல் செயற்கைகோளான அலூட் 1 ஏவப்பட்டது(1962)

>>>டி.இ.டி. மறுதேர்வு: விண்ணப்பிக்க இன்று இறுதிநாள்

டி.இ.டி., மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். இதுவரை, 15 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், விற்பனை ஆகியிருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 14ம் தேதி நடக்கும் டி.இ.டி., மறுதேர்வுக்கு, புதிய தேர்வர் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, 24ம் தேதி முதல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதல் நாள், 6,200 விண்ணப்பங்கள், விற்பனை ஆகின. நேற்று வரை, 15 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாக, துறை வட்டாரம் தெரிவித்தது.
விண்ணப்பம் வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்கவும், இன்று கடைசி நாள். இன்று மாலை, 5:30 மணிக்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

>>>மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கணினி பாடம் நடத்த உத்தரவு

மாற்றுத்திறனாளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில், கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும் என, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலர், கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, சிறப்பு கணினி அறிவியல் பாடம் நடத்துவதை, திடீரென நிறுத்தியது. அங்கு பயிலும், புவனேஸ்வரி என்ற மாணவியின் தந்தை, மீண்டும், கணினி அறிவியல் பாடம் நடத்தக் கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பாடத்தைத் தொடர உத்தரவிட்டது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர், பள்ளி நிர்வாகத்திற்கு, கணினி அறிவியல் பயில, விருப்பக் கடிதம் அளிக்கும் மாணவர்களுக்கு, பாடம் நடத்த உத்தரவிட்டார்.
தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், 23 மாற்றுத்திறனாளி மாணவர்களில், 20 பேர், சிறப்பு கணினி அறிவியல் பாடம் நடத்துவதற்கு விருப்ப கடிதம் கொடுத்தனர்.
மாணவர்களின் விருப்ப கடிதத்தை பெற்ற பள்ளி நிர்வாகம், மாணவர்களின் நிலை குறித்து, மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு தெரியப்படுத்தியது.
இதுகுறித்து, மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர், கண்ணகி பாக்கியநாதன் கூறுகையில், பெரும்பான்மையான மாணவர்களின் விருப்பத்திற்கு இணங்க, தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில், இனி சிறப்பு கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும், என்றார்.

>>>2,600 பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லை: கல்வித்துறை எச்சரிக்கை

பள்ளிக்கல்வித் துறை, மெட்ரிகுலேஷன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆகிய மூன்று துறைகளின் கீழ் 2,600 பள்ளிகள் வரை, அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது.
இந்தப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் இல்லாததால், இவற்றில் பயிலும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மத்திய அரசில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் முதல், மேலதிகாரிகளின் குழந்தைகள் வரை, அனைத்து குழந்தைகளுக்கும், ஆண்டுதோறும், கல்வி (சி.இ.ஏ., சென்ட்ரல் எஜுகேஷனல் அலவன்ஸ்) உதவித்தொகை வழங்கப்படுகின்றன. முதல் வகுப்பில் துவங்கி, பிளஸ் 2 வரை, இந்த கல்வி உதவித்தொகையை பெறலாம்.
மொழி, இனப் பாகுபாடின்றி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைவரும், இந்த கல்வி உதவித்தொகை பெற தகுதி பெற்றவர். கடந்தாண்டு வரை,12 ஆயிரம் ரூபாயாக இருந்த, கல்வி உதவித்தொகை, தற்போது, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயிலும், மாணவ, மாணவியர் மட்டுமே, இந்த கல்வி உதவித்தொகையை பெற முடியும். ஓராண்டில், நான்கு தவணை அல்லது ஆண்டு இறுதியில், ஒரே தவணையாகவும் உதவித்தொகையை பெறலாம்.
பள்ளிக் கட்டணம், சீருடை, டியூஷன் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்தியதற்கான ரசீதுகளை பெற்று, அதை, பணியாற்றும் துறையின் கணக்குப் பிரிவில் சமர்ப்பித்து, அத்தொகையை, ஊழியர் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, பள்ளியின் அங்கீகாரம் மிக முக்கியம்.
கடந்த, 2009ல், அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.அதன்படி, தனியார் நர்சரி, பிரைமரி, நிதியுதவி, சுயநிதி பள்ளிகள் அனைத்தும், தன் அங்கீகாரத்தை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு, அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் கீழ், 1,000 பள்ளிகளும், மெட்ரிகுலேஷன் இயக்குனரகத்தின்கீழ், 600 பள்ளிகளும், தொடக்கக் கல்வித்துறையின் கீழ், 1,000 பள்ளிகளும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இயங்கி வருவதாக, சம்பந்தப்பட்ட துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால், இப்பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கல்வி உதவித்தொகை பெற முடியாத சிலர் , தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, அங்கீகாரம் பெறாத பள்ளிகள் குறித்த தகவல் தெரியவந்தது.
தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறும்போது, "சேலம் மாவட்டத்தில், 24 பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை. புதுப்பிக்க விண்ணப்பித்து, பல மாதங்கள் ஆகியும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதனால், மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறமுடியாத நிலை உள்ளது' என்றார்.
முதன்மைக் கல்வி அதிகாரி ஈஸ்வரன் கூறும்போது, "சங்ககிரி மற்றும் சேலம் கல்வி மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து, அதற்கான கோப்புகள் இன்னும் வரவில்லை. வந்ததும், அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
கல்வித்துறை வட்டாரங்கள் கூறும்போது, "அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், அனைத்துப் பள்ளிகளும், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கடும் நடவடிக்கை பாயும்' என தெரிவித்தன.

>>>மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி நிதி: துணை இயக்குனர் ஆய்வு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்டந்தோறும் ஒதுக்கப்படும் கல்வி நிதி, முறையாக செலவு செய்யப்படுகிறதா என, ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி உள்ளடங்கிய கல்வி திட்ட துணை இயக்குனர் சீனிவாசன் குழுக்கள் ஆய்வு செய்தனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் அடங்கிய இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் முன்னேறும் நோக்கில், அரசு பல லட்சம் நிதி ஒதுக்குகிறது. இதன் மூலம் வட்டார வாரியாக மையங்கள் ஏற்படுத்தி, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கல்வி, சிறப்பு பயிற்சி, மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், நிதி சரியான முறையில் பயன்படுவதில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்டந்தோறும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.
திட்ட இயக்குனர் சீனிவாசன் நேற்று சிவகங்கை வந்தார். அவரது தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தலைமையாசிரியர்கள் அடங்கிய தலா 4 பேர் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுக்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 பிளாக்குகளுக்கும் சென்று மாணவர்களிடம் ஆய்வு செய்தனர்.இயக்குனர் சீனிவாசன் கூறுகையில்,"வழக்கமாக நடக்கும் ஆய்வு தான். இத்திட்டத்திற்கு வழங்கும் நிதி முறைகேடு இன்றி முழுமையாக மாணவர்களின் கல்விக்கு செலவு செய்யப்படுகிறதா? என, ஆய்வு நடத்துகிறோம். மாவட்டந்தோறும் இந்த ஆய்வு நடக்கும், என்றார்.

>>>கட்டட விதிமீறல்: பள்ளி, கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

தமிழகம் முழுவதும், அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியுள்ள, 700க்கும் மேற்பட்ட, பள்ளி, கல்லூரிகளுக்கு, "நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது என, நகரமைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து தனியார் கல்வி நிறுவன வளாகங்களையும் ஆ‌ய்வு செய்து, விதிமீறல் கட்டடங்கள் குறித்த விவரங்களை, நகரமைப்புத் துறையினர் திரட்டத் துவங்கினர்.
நகரமைப்புத் துறையின் உள்ளூர் திட்ட குழுமங்கள், மண்டல அலுவலகங்களிடம் இருந்து, இத்தகைய கட்டடங்கள் குறித்த விவரங்களும், அவற்றின் இப்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கைகளும் பெறப்பட்டன.
இந்த அறிக்கைகளை ஆய்வு செய்ததில், 500க்கும் மேற்பட்ட சுயநிதி, கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், நூலகம் ஆகியவை கட்டப்பட்டது தெரியவந்துள்ளது. முறையான அனுமதி இவற்றிற்கு இல்லை.
இவற்றில் உள்ள விதிமீறல் கட்டடங்களின் பரப்பளவு, 75 லட்சம் சதுர அடியை தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சென்னையை ஒட்டியுள்ள, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தான் அதிக எண்ணிக்கையில், சுயநிதி கல்வி நிறுவனங்கள் உள்ளன.இவற்றில் உள்ள, விதிமீறல் கட்டடங்களின் பரப்பளவு மட்டும், 30 லட்சம் சதுர அடி வரை இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வளாகங்களிலும், அனுமதியின்றி அடுக்குமாடி கட்டடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவை தொடர்பான விவரங்களும் நகரமைப்புத் துறை அதிகாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.வரன்முறை:இந்த விவரங்களுடன், இவற்றின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை, அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நகரமைப்புத் துறை, உயர்கல்வித் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இக்கல்வி நிறுவனங்களிடம், சதுர அடி அடிப்படையில், அபராதம் வசூலித்தால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்ற ஆலோசனை, அரசின் பரிசீலனையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம், 14, 28 ஆகிய தேதிகளில், நகரமைப்புத் துறை கமிஷனர் கார்த்திக், அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும், உள்ளூர் திட்ட குழுமங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.இந்த சுற்றறிக்கையின் அடிப்படையில், அந்தந்த பகுதிகளில் விதிமீறல் கட்டடங்கள் உள்ள கல்வி நிறுவனங்களை, நகரமைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், இதுவரை, 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கும், 200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும், "நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளன.
உங்கள் வளாகத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், நகரமைப்புத் துறையின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டப்பட்ட கட்டடங்கள் சட்டப்படி குற்றமாகும். எனவே, 1971ம் ஆண்டு நகரமைப்புச் சட்டத்தின் பிரிவுகள், 56, 57ன்கீழ், அனுமதியில்லா கட்டடமாக அவை அறிவிக்கப்படுகின்றன' என, நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விதிமீறலில் ஈடுபட்டுள்ள கல்வி நிறுவனங்கள், இந்த நோட்டீசுக்கு அளிக்கும் பதிலை, ஆய்வு செய்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

>>>வி.ஏ.ஓ., தேர்வு 150 மையங்கள் பதற்றம் நிறைந்தவை

"வி.ஏ.ஓ., தேர்வு நடக்கும் மையங்களில், 150 மையங்கள், பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்கள், "வெப்-கேமரா' மூலம் கண்காணிக்கப்படவுள்ளது,"" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் தெரிவித்தார்.
தேர்வாணைய அலுவலகத்தை, முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்துவிட்டு சென்றபின், தேர்வாணைய அலுவலர்கள், பணியாளர்கள் மத்தியில், தலைவர் நடராஜ் பேசியதாவது:நீங்கள் விரும்பியபடி, உங்களுக்கு தேவையான வசதிகளை அளிக்கும் வகையில், புதியகட்டடம் கட்டப்பட்டுள்ளது. பணியாளர்கள், மகிழ்ச்சியான சூழலில் வேலைபார்த்தால் தான், பணிகள் சிறப்பாக இருக்கும். அந்தவகையில், புதியஅலுவலகம், உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கும், வி.ஏ.ஓ., தேர்வு, நம் முன் உள்ள சவால். இந்த தேர்வை, வெற்றிகரமாக நடத்தி முடிக்கவேண்டும்; கண்டிப்பாக செய்வோம் என்ற நம்பிக்கைநம்மிடம் உள்ளது.இவ்வாறு நடராஜ் பேசினார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:வி.ஏ.ஓ., தேர்வு, 3,473 மையங்களில் நடக்கின்றன. 9.72 லட்சம் பேர், தேர்வுக்கு விண்ணப்பித்தனர். எவ்வளவு பேர் எழுதுகின்றனர் என்பது, 30ம் தேதியன்று தெரியும். அனைத்து தேர்வு மையங்களிலும், தேர்வுப் பணிகளை, வீடியோ எடுக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.150 மையங்கள்,பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த மையங்களில், "வெப்-கேமரா' மூலம், எனது அறையில் இருந்தபடியே, 150 மையங்களையும் கண்காணிக்க, ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. குரூப்-2 கலந்தாய்வு: ஏற்கனவே நடந்த குரூப்-2 தேர்வு தொடர்பாக, சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இதனால், கலந்தாய்வு நடத்த முடியாத நிலை இருந்து வந்தது. இவ்வழக்கில், தேர்வாணையத்திற்கு சாதகமாக, நேற்று தீர்ப்பு வந்துள்ளது.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஒரு வாரத்திற்குள், கலந்தாய்வு நடத்தப்படும். இதன்மூலம், 3,500 பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு நடராஜ் தெரிவித்தார்.

>>>காதோடு பேசினால் காது கேட்"காது'

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு, காதுகள் கேட்காமல் போகும் அபாயம் இருக்கிறது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.முன்பெல்லாம் காதில் முணுமுணுப்பு, விசில் ஒலி, சங்கு ஊதுவது போன்ற சத்தங்கள் 60 வயதினரிடையே தான் ஏற்பட்டது. மொபைல் போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், இப்போது 20 வயதினர் கூட இப்பாதிப்புக்கு ஆளாகின்றனர். மொபைல் போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் அதிகம் எனவும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது உலக காது கேளாதோர் வாரம் (செப்.,24 - 30) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் காதுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களில், கவனம் செலுத்துவது அவசியம்.இளைஞர்கள், "இயர்போனில்' தினமும் சில மணி நேரமாவது பாடல்களை கேட்கின்றனர். மொபைல் போன் மியூசிக் பிளேயர்களில், அதிக ஒலியுடன் பாடல் கேட்பவர்களுக்கு, எப்போதும் மொபைலில் பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு நிச்சயம் காதில் பாதிப்பு ஏற்படும்.
80 டெசிபலுக்கும் அதிகமான ஒலியை, தொடர்ந்து நான்கு மணி நேரம் கேட்டால் காதுகள் செவிடாகிவிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இயர்போனில் குறைந்த அளவு ஒலியை வைத்து, பாடல்களை சிறிது நேரம் மட்டுமே கேட்க வேண்டும்.சாலைகளில் காணப்படும் ஒலி மாசுபாடு, உடலளவிலும், மனதளவிலும் பாதிப்புகளை உண்டு ஏற்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு, ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அப்போது தான் இப்பாதிப்பில் இருந்து மீள முடியும்.

>>>மானியம் இல்லாத சிலிண்டர் விலை 750 ரூபாய்:எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம்

நடப்பு நிதியாண்டில், அக்டோபர் முதல், 2013 மார்ச் வரையிலான, ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும், மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும். அதற்கு மேல், தேவைப்படுவோர் சிலிண்டர் ஒன்றுக்கு, 750 ரூபாய் செலுத்த வேண்டும்.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்தைக் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதனால், "ஒரு வீட்டிற்கு, ஆண்டுக்கு ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும். அதற்கு மேல் தேவைப்படுவோர், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது நிர்ணயிக்கும், சந்தை விலையை கொடுத்து, காஸ் சிலிண்டர் வாங்கிக் கொள்ள வேண்டும்' என, சமீபத்தில் அறிவித்தது.
அதேநேரத்தில், "இந்த நிதியாண்டில், மீதமுள்ள ஆறு மாதங்களுக்கு, மூன்று சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும்' என்றும் தெரிவித்தது.அதனால், அக்டோபர் 1ம் தேதி முதல், 2013, மார்ச் 31 வரையிலான, ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும், மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில், அதாவது, 399 ரூபாய்க்கு வழங்கப்படும். அதற்குமேல், காஸ் சிலிண்டர் வாங்குவோர், 14.2 கிலோ எடை கொண்ட ஒரு காஸ் சிலிண்டருக்கு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள சந்தை விலையான, ரூ.756.50 செலுத்த வேண்டும்.
இந்த சந்தை விலையும், சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், மாதம் தோறும் மாறுபடும். அதே நேரத்தில், வர்த்தக பயன்பாட்டிற்கான, 19 கிலோ எடை கொண்ட, காஸ் சிலிண்டருக்கு, 1,334 ரூபாய் செலுத்த வேண்டும்.காங்கிரஸ் கட்சி ஆளும், சில மாநிலங்கள் மட்டும், "ஆண்டுக்கு ஒன்பது, சமையல் காஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும்' என, அறிவித்துள்ளன. மத்திய அரசு அறிவித்துள்ள, ஆறு சிலிண்டர்கள் போக, மீதமுள்ள மூன்றுக்கான மானியத்தை, மாநில அரசுகளே வழங்கி விடும். பொதுமக்களின் நலன் கருதி, இந்த முடிவை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

>>>உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, கூடுதல் இட ஒதுக்கீட்டால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இடம் வழங்க, எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று நடக்கிறது.
தமிழகத்தில் அமலில் உள்ள, 69% இடஒதுக்கீட்டின்படி, எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கு இரண்டு கட்டமாக நடந்த கலந்தாய்வு, கடந்த, 18ம் தேதி முடிந்தது. இதில், தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின், 1,823 மற்றும் 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள் முழுவதும் நிரம்பிவிட்டன.
இந்நிலையில், 69% இடஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த, 24ம் தேதி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 69% இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டுள்ள, தகுதியுடைய மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில், கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களை சேர்க்கும் நடவடிக்கையை, மாநில அரசு உடனே எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி, 99% மதிப்பெண் பெற்றும், மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவ, மாணவியருக்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடுத்து, 50% இடஒதுக்கீட்டின்படி, எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இக்கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியான மாணவர்களுக்கு, இன்று கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர் சுகுமார் கூறியதாவது: இன்று நடக்கும் கலந்தாய்விற்கான, தரவரிசை பட்டியல் உள்ளிட்ட விவரங்கள், www.tnhealth.org , www.tn.gov.in ஆகிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி மட்டுமே, விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இவர்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., இடம் வழங்கப்படும்.
இக்கலந்தாய்வில் அதிகரிக்கப்படும், எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலை பெற, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுகுமார் கூறினார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ்., இடங்களும், இடஒதுக்கீடு முறையில் தான் நிரப்பப்படுகின்றன. ஆனால், இன்று, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தான், 50% இடஒதுக்கீட்டின் படி, கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

>>>ரேபிஸ் என்ற அரக்கன்: இன்று உலக ரேபிஸ் தினம்

 
ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வௌவால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.

ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு முன் இந்நோய்க்கு மருந்தே கிடையாது. உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இவரது மறைந்த நாளான செப்., 28ம் தேதி, உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால், உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர், சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 97 சதவீத ரேபிஸ் நோய், நாய்கள் மூலம் தான் பரவுகின்றன. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் நாய்கள் உள்ளன. அதில் 60 சதவீதம் தெருவில் திரியும் நாய்களாகவும், மீதி வீட்டில் வளர்க்கும் நாய்களாகவும் உள்ளன என தனியார் ஆய்வு தெரிவிக்கிறது. இவை மூலம் ரேபிஸ் அதிகமாக பரவுகிறது.

கவனம் அவசியம்: வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன், அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின் டாக்டரிடம் காட்டி, சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது.

>>>செப்டம்பர் 28 [September 28]....

  • உலக ரேபிஸ் நோய் தினம்
  • பசுமை நுகர்வோர் தினம்
  • தாய்வான் ஆசிரியர் தினம்
  • சீன பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்த தினம்(கிமு 551)
  • அலெக்சாண்டர் பிளமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்(1928)

>>>RMSA - கூடுதல் மாநிலத் திட்ட இயக்குநர் பதவி மாநிலத் திட்ட இயக்குநர் என மாற்றப்பட்டுள்ளது

>>>இரட்டைப்பட்டம் பணி நியமனத்திற்கோ, பதவி உயர்வுக்கோ செல்லாது - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு (Double Degree - Not Eligible for Appointment and Promotion - Chennai High Court Judgement)

>>>முப்பருவக் கல்வி முறை - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை - பள்ளி நடைமுறை அரசாணை - திருத்தம் வெளியீடு

>>>தொடக்கக்கல்வித்துறை - சதுரங்கப்பலகைகள் வாங்க பள்ளிகளின் விவரம் கேட்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  ந.க.எண்:07436/கே2/2012, நாள்:27-09-2012ன் படி சதுரங்கப் பலகைகள் வாங்குவதற்காக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.39.47இலட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்ய மாவட்டங்களிலுள்ள தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளின் விவரம் கோரப்பட்டுள்ளது.

>>>தமிழில் எளிமையாக தட்டச்சு செய்வது எப்படி? [How to Type in Tamil Easily?]...

  • வலைதளம், முகநூல் (Facebook), மைக்ரோஸாஃப்ட்  வேர்ட் (Microsoft Word) உள்ளிட்ட அனைத்துப் பயன்பாடுகளிலும் தமிழில் எளிமையாக தட்டச்சு செய்வது எப்படி?
  •  ஓர் கணினியில் குறிப்பிட்ட தமிழ் Font-ல் தட்டச்சு செய்ததை மற்றொரு கணினியில் அந்த Font-ஐ Install செய்யாமல் பார்ப்பது எப்படி?
போன்ற பல்வேறு வினாக்களுக்கும் தீர்வாக NHM Writer மென்பொருள் உதவுகின்றது.



Download 

  Manual





இந்த மென்பொருளை கணினியில் நிறுவுவது எப்படி?
  • முதலில் NHM Writer மென்பொருளைத் தரவிறக்கம்(Download) செய்து கொள்ளவும்.
  • தரவிறக்கம் செய்த பின்பு Cursor-ஐ அதன் மீது வைத்து Double Click செய்யவும்.
  • தோன்றும் Window-ல் Next Button-ஐ Click செய்யவும்.
  • தோன்றும் Window-ல் I accept the Agreement-ஐ Select செய்து பின்னர் Next Button-ஐ Click செய்யவும்.
  • தோன்றும் Window-ல் Next Button-ஐ Click செய்யவும்.
  • தோன்றும் Window-ல் My Language-ல் Tamil-ஐ Select செய்து பின்னர் Next Button-ஐ Click செய்யவும்.
  • தோன்றும் Window-ல் Next Button-ஐ Click செய்யவும்.
  • தோன்றும் Window-ல் Create Desktop Icon-ஐ Select செய்து பின்னர் Next Button-ஐ Click செய்யவும்.
  • தோன்றும் Window-ல் Install Button-ஐ Click செய்யவும்.
  • தோன்றும் Window-ல் Launch NHM Writer-ஐ Select செய்து பின்னர் Finish Button-ஐ Click செய்யவும்.
  • தற்போது MS Word File-ஐ Open செய்த பிறகு "Alt+1" Button-ஐ Click செய்வதன் மூலம் Tamil 99 Unicode Font-ல் Type செய்யலாம். "Alt+2" Button-ஐ Click செய்வதன் மூலம் Tamil Phonetic Unicode Font-ல் SMS முறையில் Type செய்யலாம். "Alt+3" Button-ஐ Click செய்வதன் மூலம் Tamil Old Typewriter Unicode Font-ல் Type செய்யலாம். "Alt+4" Button-ஐ Click செய்வதன் மூலம் Tamil Bamini Unicode Font-ல் Type செய்யலாம். "Alt+5" Button-ஐ Click செய்வதன் மூலம் Tamil Inscript Unicode Font-ல் Type செய்யலாம். மேலும் Desktop-ன் வலது கீழ்ப்புற மூலையில் கடிகாரத்திற்கு அருகிலுள்ள மணி(Bell) போன்ற Symbol-ஐ Click செய்து Settings-ஐ மாற்றிக்கொள்ளலாம். இதில் "Alt+6" Button-க்கு Tamil Old Typewriter Vanavil-ஐ ஒதுக்கீடு செய்வதன் மூலம் Tamil Vanavil Font-ல் Type செய்யலாம். 

>>>மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 27-09-2012 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்...

Press Release
 Press Release
 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 27-09-2012 அன்று சென்னை, வ.உ.சி. நகர், ப்ரேஸர் பாலச் சாலையில் ரூ.19 கோடியே 86 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்...

>>>இரண்டாம் பருவப் பாடப்புத்தகங்கள் (1-8 வகுப்புகள்) [Tamil Nadu Text Books Online - Second Term and CBSE Tamil Text Book for I to VIII Std]

இரண்டாம் பருவம் - Second Term

Index of Class One Text Books
 
முப்பருவத்திட்டப் பாடப்புத்தகங்கள் (Text Books under Trimester Pattern)

(File size range : 2.57 MB to 8.54 MB)

தமிழ் & ஆங்கிலம்
Tamil & English
 
கணிதம் & சூழ்நிலையியல்
Mathematics & Environmental Studies
தமிழ்
Tamil
ஆங்கிலம்
English
கன்னடம்
Kannada
மலையாளம்
Malayalam
தெலுங்கு
Telugu
உருது
Urdu



Index of Class Two Text Books
 முப்பருவத்திட்டப் பாடப்புத்தகங்கள் (Text Books under Trimester Pattern)

(File size range : 2.23 MB to 20.20 MB)

தமிழ் & ஆங்கிலம்
Tamil & English
 
கணிதம் & சூழ்நிலையியல்
Mathematics & Environmental Studies
தமிழ்
Tamil
1  2  3  4
5  6  7  8
ஆங்கிலம்
English
1  2  3  4
5  6  7  8
கன்னடம்
Kannada
1  2  3
மலையாளம்
Malayalam
1  2  3
தெலுங்கு
Telugu
1  2  3
உருது
Urdu





















Index of Class Three Text Books
 முப்பருவத்திட்டப் பாடப்புத்தகங்கள் (Text Books under Trimester Pattern)

(File size range : 3.6 MB to 12.2 MB)

தமிழ் & ஆங்கிலம்
Tamil & English
 
கணிதம் & சூழ்நிலையியல்
Mathematics & Environmental Studies
தமிழ்
Tamil
1  2
ஆங்கிலம்
English
1  2
கன்னடம்
Kannada
1  2
மலையாளம்
Malayalam
1  2
தெலுங்கு
Telugu
1  2
உருது
Urdu



Index of Class Four Text Books
முப்பருவத்திட்டப் பாடப்புத்தகங்கள் (Text Books under Trimester Pattern)
(File size range : 3.30 MB to 11.4 MB)

தமிழ் & ஆங்கிலம்
Tamil & English
 
கணிதம் & சூழ்நிலையியல்
Mathematics & Environmental Studies
தமிழ்
Tamil
1  2
ஆங்கிலம்
English
1  2
கன்னடம்
Kannada
1  2
மலையாளம்
Malayalam
1  2
தெலுங்கு
Telugu
1  2
உருது
Urdu




Index of Class Five Text Books
முப்பருவத்திட்டப் பாடப்புத்தகங்கள் (Text Books under Trimester Pattern)

(File size range : 2.17 MB to 9.25 MB)

தமிழ் & ஆங்கிலம்
Tamil & English
 
கணிதம் & சூழ்நிலையியல்
Mathematics & Environmental Studies
தமிழ்
Tamil
ஆங்கிலம்
English
கன்னடம்
Kannada
மலையாளம்
Malayalam
தெலுங்கு
Telugu
உருது
Urdu



Index of Class Six Text Books
 முப்பருவத்திட்டப் பாடப்புத்தகங்கள் (Text Books under Trimester Pattern)

(File size range : 3.34 MB to 10.30 MB)
( - Audio Enabled Text Books
After the document is downloaded, within Adobe Reader,
press 'Shift + Ctrl + Y' keys to ACTIVATE/DEACTIVATE 'Read out loud' option and
press 'Shift + Ctrl + B' keys to ENABLE 'Read out loud' option and
press 'Shift + Ctrl + E' keys to DISABLE 'Read out loud' option)

கணிதம், அறிவியல் & சமூக அறிவியல்-Mathematics, Science & Social Science
தமிழ்
Tamil
ஆங்கிலம்
English
கன்னடம்
Kannada
மலையாளம்
Malayalam
தெலுங்கு
Telugu
1  2  3  4
உருது
Urdu



Index of Class Seven Text Books
முப்பருவத்திட்டப் பாடப்புத்தகங்கள் (Text Books under Trimester Pattern)

(File size range : 3.32 MB to 14.80 MB)
( - Audio Enabled Text Books
After the document is downloaded, within Adobe Reader,
press 'Shift + Ctrl + Y' keys to ACTIVATE/DEACTIVATE 'Read out loud' option and
press 'Shift + Ctrl + B' keys to ENABLE 'Read out loud' option and
press 'Shift + Ctrl + E' keys to DISABLE 'Read out loud' option)


கணிதம், அறிவியல் & சமூக அறிவியல்-Mathematics, Science & Social Science 
தமிழ்
Tamil
1  2  3  4
ஆங்கிலம்
English
1  2  3  4
கன்னடம்
Kannada
1  2  3  4
மலையாளம்
Malayalam
1  2  3  4
தெலுங்கு
Telugu
உருது
Urdu



Index of Class Eight Text Books
முப்பருவத்திட்டப் பாடப்புத்தகங்கள் (Text Books under Trimester Pattern)

(File size range : 2.13 MB to 14.30 MB)
( - Audio Enabled Documents
After the document is downloaded, within Adobe Reader,
press 'Shift + Ctrl + Y' keys to ACTIVATE/DEACTIVATE 'Read out loud' option and
press 'Shift + Ctrl + B' keys to ENABLE 'Read out loud' option and
press 'Shift + Ctrl + E' keys to DISABLE 'Read out loud' option)

தமிழ் & ஆங்கிலம்
Tamil & English
1  2  3  4  5

  கணிதம், அறிவியல் & சமூக அறிவியல்-Mathematics, Science & Social Science
தமிழ்
Tamil
1  2  3  4 
5  6  7
ஆங்கிலம்
English
1  2  3  4 
5
கன்னடம்
Kannada
1  2  3  4 
5  6  7
மலையாளம்
Malayalam
1  2  3  4 
5  6  7
தெலுங்கு
Telugu
1  2  3
உருது
Urdu




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...