கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாறுகிறது பிளஸ் 2 பாடத்திட்டம்: கல்வியாளர்களிடம் கருத்து கேட்பு

தற்போதுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றி, அடுத்தாண்டு முதல் புதிய பாடதிட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான மாதிரி பாடதிட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வியாளர்களுடன் கருத்துகள் கேட்க கூட்டம் நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை பெரிய கடைவீதி புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் கூட்டம் நடைபெற்றது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மனையியல், ஊட்டசத்து, கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கருத்துகள் கேட்கப்பட்டன.
மாதிரி பாடதிட்டத்தை கல்வியாளர்கள் படித்து பார்த்து, அதில் சேர்க்கப்பட வேண்டிய பகுதிகள், நீக்கப்பட வேண்டிய பகுதிகளை குறிப்பெடுத்து கொடுத்தனர். கல்வியாளர்கள் கொடுக்கும் குறிப்புகளை கொண்டு, வரைவு பாட திட்டம் உருவாக்கப்பட்டு, அவற்றை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழ், ஆங்கிலம், கணிதம், புள்ளியியல், வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், இந்திய பண்பாடு, கலாச்சாரம், கணக்கு பதிவியல், வணிகவியல், சிறப்பு தமிழ், புவியியல் ஆகிய பாடங்களுக்கும் கருத்து கேட்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் - QUEUE AT POLLING STATION / வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை அறிய புதிய இணையதளம் அறிமுகம்...

  வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம் -  QUEUE AT POLLING STATION / வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை அறிய புதிய இணையதளம் அ...