கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆபிரகாம் லிங்கன்....

 
இன்று பிப்.12 : ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...

‘‘நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!’’

முதன்முதலாகத் தேர்தலைச் சந்தித்துத் தோல்வியடைந்த நேரத்தில், பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார் ஆபிரகாம் லிங்கன். கூட்டம் முடிந்ததும், ‘‘உங்களில் சொர்க் கத்துக்குச் செல்ல விரும்புபவர்கள் மட்டும் கையைத் தூக்குங்கள்’’ என்றார் பாதிரியார். எல்லோரும் கையைத் தூக்க, ஆபிரகாம் மட்டும் பேசாமல் நின்றார்.

‘‘ஆபிரகாம்! நீ எங்கே போவதாக உத்தேசம்?’’ எனப் பாதிரியார் கேட்க, தோல்வி அடைந்திருந்த அந்த மன நிலையிலும், ‘‘நான் செனட் உறுப்பினராகப் போகிறேன்’’ என்று உறுதியான குரலில் சொன்னார் ஆபிரகாம்.

‘‘நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!’’ என, புன்னகையுடன் ஆசி வழங்கினார் பாதிரியார்.

1809&ம் வருடம், அமெரிக்காவின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த லிங்கனை, ‘தோல்விகளின் செல்லக் குழந்தை’ என்றே சொல்லலாம். அந்த அளவுக்குத் தொடர் தோல்விகள் அவரைத் துரத்திக்கொண்டே இருந்தன. பிறந்த சில வருடங்களிலேயே தாயை இழந்தார். ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக்கொண்டே இரவு நேரங்களில் மட்டும் பள்ளிப் பாடத்தை ஆர்வத்துடன் படித்தார்.

இளைஞனாகி, பக்கத்து நகருக்குப் போனபோது, அங்கே அடிமைகளை வியாபாரம் செய்யும் மனிதச் சந்தையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கறுப்பர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றி அவர் கேள்விப் பட்டிருந்தாலும், காய்கறி போல மனிதர் கள் விற்கப்படுவதை நேரில் கண்டதும் ரத்தம் சூடேற, லிங்கனுக்குள் ஒரு புது லட்சியம் பிறந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால்தான் இந்த அவலத்தை அகற்ற முடியும் என்று தெரிந்ததும், அவசரமாக தனது 22-வது வயதில் ஒரு நகராட்சித் தேர்தல் வேட்பாளராகக் களம் இறங்கி, படு தோல்வி அடைந்தார். இந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் தொடங்கி, அதிலும் பெரும் கடனாளியாக மாறியிருந்தார்.

சோர்ந்துபோயிருந்த லிங்கனை ஒரு போராளியாக மாற்றியது, அவரது வளர்ப்புத் தாய் சாரா புஷ். ‘ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்றால், ஆசைப்படுவதைப் பெறுவதற்கான தகுதிகளை முதலில் வளர்த்துக்கொள். நீ எதுவாக விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!’’ என்றார் சாரா புஷ். பாதிரியார் சொன்ன அதே வார்த்தை கள்!

இப்போது லிங்கனுக்கு தன் இலக்கு புரிந்தது. மனதில் தெளிவு பிறந்தது. அடிமை வியாபாரத்தை சட்டம் போட்டுத் தானே ஒழிக்க முடியும்? எனவே, முழுமூச் சுடன் சட்டம் படிக்கத் தொடங்கினார் லிங்கன். மக்கள் மனதை மாற்றினால் மட்டுமே சட்டத்தைச் சுலபமாக அமல்படுத்த முடியும் என்பதால், சட்டப் படிப்புடன் பேச்சுத் திறமையையும் வளர்த்துக்கொண்டார். அடிமை ஒழிப்பைப் பற்றி ஊர் ஊராகக் கூட்டம் போட்டுப் பேசினார். ஒரு தலைவருக்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு, 1834&ல் நடந்த நகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அதன்பின், நகராட்சித் தலைவர், மாமன்ற உறுப்பினர், செனட் உறுப் பினர், உப ஜனாதிபதி என பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டு, சில வெற்றிகளையும் பல தோல்விகளையும் சந்தித்து, 1860-ம் வருடம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். ஆம், எதுவாக மாற நினைத் தாரோ, அதுவாகவே ஆனார் லிங்கன்.

இல்வாழ்விலும் அவருக்குத் தோல்விகள்தான்! 1835-ல் அவரின் காதலி ‘ஆனி’ விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்தார். 33&வது வயதில் மேரியுடன் திருமணம் முடிந்து, நான்கு குழந்தைகள் பிறந்தன. மூன்று பேர் சிறு வயதிலேயே மரணமடைந்தார்கள். மனைவிக்கு மனநோய் இருந் தது. இத்தனைத் தோல்வி களையும் மன உறுதியோடு எதிர்கொண்டதால்தான், லிங்கன் வெற்றி பெற முடிந்தது.

அமெரிக்க ஜனாதிபதி யானதும், அதிரடி நடவடிக்கை எடுத்து, அடிமை அவலத்தை ஒழித்து, மாகாணங்களை ஒன்று சேர்த்து, அமெரிக்காவைத் தலை நிமிரவைத்தார் லிங்கன். அந்தச் சாதனையால்தான், அடுத்த முறையும் அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1865&ல் நாடகம் பார்த்துக்கொண்டு இருந்தபோது ஒரு நிறவெறி யனால் சுடப்பட்டு மரணம் அடைந்தார் லிங்கன்.

‘நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்’ என்பது ஆபிரகாம் லிங்கனுக்கு மட்டுமல்ல...

நம்பிக்கையைத் தளரவிடாமல், லட்சியத்துக்காக விடாப்பிடியாகப் போராடும் ஒவ்வொருவருக்கும் அது வெற்றித் திருமந்திரம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்...

   2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்... Academic Year 2023-2024 - Details of School Working Days... >>> தரவிறக்கம...