கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஈபில் டவரையே (eiffil tower ) விலைக்கு விற்ற மனிதன்...

ஒரு படத்தில வடிவேல் அரசாங்க பஸ்ச இது உங்கள் சொத்து அப்பிடி என்று சொல்லி விப்பாரே .அத விட இன்னும் பயகரமான மோசடி பற்றிதுதான் இது அந்த பெரிய பாரிஸ் உள்ள டவரையே விலைக்கு வித்த முக்கியமா அத வாங்கின அந்த புத்திசாலி பற்றி தெரியனுமா ?தொடந்து படிங்க

வசீகரிக்கும் பேச்சு ஆற்றல கொண்ட ஒருவன்(ர்)இந்த கைங்கரியத்தை !! இலகுவாக செய்து முடித்தான் .1890 ம் ஆண்டு செகொச்லாவாகியா வில் பிறந்த இந்த விக்டர்லுஸ்டிக் (victer lustig ) பல மொழிகளில் மிகவும் சரளமாக பேசக்கூடிய ஆற்றல கொண்டவன் ,கூடவே எப்படி ஒரு மனிதனை பேச்சின் முலமாக வசிய படுத்த முடியும் எனும் திறனையும் கொண்டவனாம் .

நியூ ஜோக் மற்றும் பாரிஸ் நகரங்களில் மக்கள் கூடும இடங்களில் தனது வாய் திறமை முலம பல சட்டவிரோதமான வியாபார விசயங்களை செய்து வந்தவன் .இவனே கள்ளமாக காசு அச்சடிக்கும் இயந்திரம் பற்றி முதல் முதலில் அக்கறையுடன் செயட்பட்ட்வன் இவன் இப்படியான இயந்திரகளை மிகவும் தந்திரமாக விற்று இத முலம பெரும் காசு பார்த்தவன் .தன்னிடம் இந்த இயந்திரம் வாங்க வருபவர்களை அழைத்து சென்று அவர்கள் முன்பேபணம் அச்சடித்து காட்டுவான் .அதுவும் ஆறு மணி நேரத்துக்குள் 100 மில்லியன் டாலர்களை அடிக்கும் என் கதை விட்டு பின் அதை அவர்குக்கு 30,0000 டொலர்களுக்கு விற்று விடுவான் .அவர்களும் இதை வாங்கி கொண்டு போய் விடுவார்கள் ஆனால் அது வெறும் 10 மில்லியன் டொலர்களை மட்டுமே அடிக்கும் .வாங்கியவர்களுக்கு தாங்கள் ஏமாற்ற பட்டு இருக்கிறோம் என்று தெரிய வரமுதல் வேறு ஒரு நாட்டில் இருப்பன் இவன் .

சரி சரி நாம் இப்ப ஈபில் ரவர் விசயத்துக்கு வருவம் .1925ம் ஆண்டு எப்பிடி யாரையாவது கவிழ்ப்பது என எண்ணிக்கொண்டே பத்திரிகை ஒன்றை படித்து கொண்டு இருந்த விக்டேருக்கு திடிரென ஒரு பொறி தட்டியது .ஈபில் டவேர் பராமரிப்பு சம்பந்தமாக அந்த இடத்து நகரசபையில் அலசப்பட்ட விடயமே அந்த பத்திரிகை செய்தி.அதை வைத்து கொண்டே தனது தந்திர புத்திக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தான் .உடனே பழைய இரும்பு சேகரிக்கும் முகவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினான் .ஈபில் டவர் பராமரிப்பில்கஸ்ரம் நிலவுகிறது .அத்துடன் அதன் உறுதியும் குலைந்து வருகிறது .எனவே அதனைபோதிய விலைக்கு விற்க முடிவு எடுத்து இருப்பதாகவும் கடிதம் பறந்தது .அதனை கடிதமும் அக்மார்க் அரச முத்திரையுடன் ,

அதை நம்பி ஆறு முகவர்கள் வந்தார்கள் அவர்களை பாரிஸில் பழைய ஹோட்டல்களில் ஒன்றான hotel de crillon அதில் வைத்து தான் தபால் தொலை தொடர்பு இணை இயக்குனர் என பீலா விட்டு மிகவும் சிறந்த ஒரு வியாபார டில் முடித்தான் .(இந்த ஈபில் டவர் பிரான்சில் தபால் மற்றும் தொலைதொடர்பு அமைச்சின் தேவைக்கு என உருவாக்கபட்டது என்பது கொசுறு தகவல் .

அதில் அன்று போயசியன் (andre poisson) நபர இந்த டிலை ஒத்து கொண்டு வாங்க சரி என் பட்டார்.அவனிடமும் இதை விற்க தரகு பணம் கூட வாங்கினான் இந்த விக்டர் என்றால் பார்த்து கொள்ளுங்கள் அவன் எப்படி பட்ட எம கண்டன் என்று .அவன் வாங்கிய லஞ்ச பணம் ஈபில் டவரின் விலையின் 30 % .எப்படி வியாபாரம் .பணத்தை பெற்றதும்தான் தாமதம் அவனும் அவன் செயலாளரும் !உடனே பை நிறைய பணத்துடன் வியனாவுக்கு ஓடி விட்டனர் .ஏமாற்ற பட்ட நபர அவமானம் காரணமாக போலிசுக்கு கூட அவனை பற்றி சொல்ல வில்லை .அவனின் அதிஷ்டம் தப்பி விட்டான்

ருசி கண்ட பூனை திரும்பவும் வியன்னாவில் பணம் எல்லாம் முடிந்த பின் அடுத்த ஆறு பேருக்கு கடிதம் அனுப்பினான் .திரும்பவும் பாரிஸ் வந்து .ஆனால் அதுவே அவனுக்கு ஆப்பாய் போனது சந்தேகப்பட்ட ஒரு டீலர் ரகசியமாய் போலிசுக்கு போட்டு விட போலீஸ் அள்ளிக்கொண்டு போய்விட்டது .1935 may 10 அன்று கைது செய்யபட்ட அவன் போலீஸ் காவலில இருந்து தப்ப முற்பட்டது வேறு கதை .1949 ம் ஆண்டு அவன் இறந்து போனான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாடாளுமன்றத் தேர்தல் 2024 - மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டியவை...

  நாடாளுமன்றத் தேர்தல் 2024 - மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டியவை... Parliamentary Elections 2024 - To be handed over to Zonal Officer... &...